இந்தியாவில் மரங்களின் வகைகள் பட்டியலிளிருந்து மூங்கில் மரம் நீக்கபட்டுள்ளது. இந்த புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் கிராம பகுதிகள் பொருளாதார வளர்ச்சியடையும், மூங்கிலை சாகுபடி செய்யவும் பிற இடங்களுக்கு வெட்டி சிக்கலில்லாமல் அனுப்பவும் முடியும் எனவம் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
திருப்பதி; கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு மற்றும் வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய லட்டு விலை ரூ. 25 இல் இருந்து ரூ. 50 ஆகவும், பெரிய லட்டு விலை ரூ. 100 இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது… sources; www.dinasuvadu.com
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தற்காலிக தலைவராக நீதிபதி யு.டி சால்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இயற்கை வளங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விரைவில் விசாரணை செய்ய இந்த தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த ஸ்வதந்தர் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதையடுத்து நீதிபதி யு.டி சால்வியை தற்காலிக தலைவராக நியமித்து […]
குஜராத் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றுள்ள தலித் இயக்க தலைவர் ஜிக்னேஷ் மேவானி “இந்திய பிரதமர் நரேந்திர மோடி இனிமேலும் நாட்டுமக்களை தனது பொய், புரட்டு பேச்சுக்களால் ஏமாற்றுவதை நிறுத்திக் கொண்டு இமயமலைக்கு சென்று தவ வாழ்க்கை வாழவேண்டும்” என்று கடுமையாக சாடியுள்ளார். இதனால் சங்கி ஆதரவாளர்கள் கடுமையாக கொதித்து எழுந்து ஜிக்னேஷ் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்று கூக்குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து […]
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் அவரது காதலி அனுஷ்கா சர்மாவுக்கு இத்தாலி நாட்டில் திருமணம் நடைபெற்றது. இதனைமத்திய பிரதேச பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா கடுமையாக விமரிசித்துள்ளார் ” புராதன காலத்தில் ராமருக்கும் சீதைக்கும் இந்தியாவில்தான் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இந்துக்கள் அனைவருமே இந்தியாவில்தான் திருமணம் செய்து கொள்வது இந்து கலாச்சாரம் ஆகும் இதற்கு மாறாக விராட் கோலி இத்தாலி நாட்டில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தேச விரோத செயலாகும் […]
இந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, சித்தார்த்பெகுரா, உள்ளிட்ட 17 பேர் மீது குற்றச்சாட்டபட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு வழங்கவிருக்கிறார்.
மின்சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரயில்வே நிலையங்களில் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் என ரயில்வேதுறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில்வே துறை சார்ந்த அனைத்துப் பகுதிகளிலும் நூறு விழுக்காடு எல்இடி விளக்குகளைப் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிலையங்கள், ஊழியர் குடியிருப்புகள், நடைமேடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களில் […]
மோட்டார் வாகன சட்டம் தினம் தினம் புதுபுது சட்டங்களை புகுத்தி மக்களை குழப்ப்புகிறது. இதன்படி, தற்போது கார்கள், மற்றும் இருசக்கர வாகனங்களில் ‘கிரஸ் கார்ட்’ அல்லது ‘புல் பார்’ என்று அழைக்கபடும் தடுப்பு கம்பிகள் பொருத்துவது குற்றம் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. அவ்வாறு புல் பார் பொருத்துவது மோட்டார் வாகன சட்டத்தின் 52ஆம் பிரிவை மீறுவதாக அமைகிறது. மேலும் அந்த சட்டத்தின் 190 மற்றும் 191-ம் பிரிவின் படி தண்டனைகுரிய குற்றமாகும். எனவே இதனை […]
ஐபிஎஸ் உயர் அதிகாரியும் முன்னாள் ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் தடுப்புத் துறை இயக்குநருமான ஜேக்கப் தாமஸை கேரள அரசு இடைநீக்கம் செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் ஜேக்கப் பேசியதைத் தொடர்ந்து, அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில், கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும் ஊழலுக்கு எதிராகப் போராட மக்கள் அச்சப்படுவதாகவும் அவர் பேசியதாக அரசுத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கு குறித்து இவ்வாறு […]
குஜராத் மாநிலம் 182 தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு 99 தொகுதி மட்டுமே கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளை பெற்றுள்ளது. கடந்த 33 வருசத்தில் காங்கிரஸ் கட்சி குஜராத்தில் பெற்ற அதிகபட்சமாகும். இந்த தேர்தல் பற்றி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மிகுந்த திருப்தியை தருகிறது. முடிவுகள் நல்ல விதமாக உள்ளன. 3 மாதங்களுக்கு முன்பு நான் குஜராத்துக்கு சென்றபோது காங்கிரசுக்கு […]
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் விடுதலையாக உள்ளார்.நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்,நீதிபதிகளின் செயல்பாடுகள் ஆகியவைகளை பற்றி விமர்சித்த நீதிபதி கர்ணன் ஜீன் 20ஆம் தேதி கோவையில் கைது செய்யப்பட்டார்.இப்போது 6 மாத சிறை தண்டனைக்கு பிறகு கொல்கத்தா சிறையிலிருந்து விடுதலையாகிறார். இவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் பிஜேபி தனது ஆட்சியை தக்கவைத்து கொண்டது.இதனையடுத்து குஜராத்தின் நவ்ரான்பூராவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்தில் குஜராத் டிஜிபி பிரமோத்ஜா ஆய்வு நடத்தியுள்ளனர்.
கேரளா, மீனவர்களுக்காக “க்ரூப் ஆக்சிடென்ட் இன்ச்சுரன்ஸ்”என்னும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை கேரள மீன்வளத்துறை மற்றும் கேரள மீனவர்கள் நலவாரியம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மீன்பிடிக்க சென்று காணாமல்போகும் மீனவர்கள் மற்றும் படுகாயம் அடையும் மீனவர்களுக்குக் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 – 70 வயதுடைய மீனவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். மேலும் இயற்கைப் பேரிடர் மற்றும் விபத்து மூலம் உயிரிழக்கும் மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம்வரை காப்பீடு கிடைக்கும் என்றும் கேரள அரசு […]
குஜராத், இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் முதலமைச்சர்களை தேர்வு செய்வதற்காக இரு முக்கிய தலைவர்களைக் கொண்ட இரண்டு குழுக்களை பா.ஜ.க. மேலிடம் அமைத்துள்ளது. குஜராத், இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் ஆட்சிமன்றக் குழுவில் உள்ள முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் குஜராத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பொறுப்பு, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே ஆகியோரிடம் வழங்கப்பட்டது. […]
குஜராத் தேர்தலில் ஆளும் பாஜக 99 இடங்களை கைபற்றியுள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து சுயேட்சையாக வட்காம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்த ஜிக்னேஷ் மேவானி தனது வெற்றியை குறித்து பேட்டி ஒன்றில், ‘நாடு மாற்றத்தை விரும்புகிறது, அதற்கு தயாராகிவிட்டது. அதனால்தான் 150 இடங்களை கைப்பற்றும் என உறுதியாக கூறிய பாஜகவால் 99 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது’ என கூறினார். மேலும் படிக்க www.dinasuvadu.com
குஜராத் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாகரிகமான பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் கட்சியின் குஜராத் தேர்தல் பொறுப்பாளருமான அசோக் கெலாட் தெரி வித்துள் ளார். குஜராத் தேர்தல் முடிவு குறித்து அசோக் கெலாட் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் குஜராத்தில் நாகரிமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார். பஸ் பயணங்கள் மூலம் மக்களோடு நெருக்கமாக இருந்தார். காங்கிரசும் அவரது வழியில் பிரச்சாரம் செய்தது. தேர்தல் முடிவுகளை ராகுல் காந்தியின் […]
சிறப்பு ரயில்கள் இயக்கம் சென்னை எழும்பூர்-கோவை இடையே டிச.20 இரவு 11.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும். அதேபோல் அகமதாபாத்-மங்களூரு இடையே டிச.23,30 தேதிகளில் இரவு 9.35 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கபடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. source:Dinasuvadu.com
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய தீவிரவாதிகளில் 2 பேரை சுட்டுக்கொன்ற எல்லைப் பாதுகாப்புப்படையினர், மற்றொருவனை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எல்லை பாதுகாப்புப் படையினருக்குக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் சத்ரிபோரா, வெஹில், நவ்கம், டங்கம் உள்பட பல்வேறு பகுதியில், நேற்று மாலை முதல் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பட்முரான் (Batmuran) பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு […]
ஓகி புயலால் பாதித்த தமிழகத்திற்கு 2ம் கட்டமாக ₹561 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.அதேபோல் கேரள மாநிலத்திற்கும் 2-ம் கட்டமாக ₹513 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியுதவியை விடுவித்தது மத்திய அரசு. source:www.dinasuvadu.com