இந்தியா

குஜராத்த்தில் பாஜகவின் வெற்றி; வெற்றியல்ல…!

2012ல் நடந்த சட்டமன்ற  தேர்தலில் பாஜக 115 தொகுதிகளிலும் காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால் இந்த ஆண்டு நடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 தொகுதிகளிலும் காங்கிரஸ் 79 தொகுதிகளிலும் வெற்றி  பெற்றுள்ளன. ஆனால் பிஜேபியின் ஓட்டு சதவீதமானது 15% சரிவு நோக்கி சென்றுள்ளது. அதேபோல் சட்டமன்ற இடங்களும் சுமார் 18 இடங்களை காங்கிரஸ் மற்றும் இதர காட்சிகளுக்கு தரைவார்த்துள்ளது. குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி பெருமையோடு வெற்றிக்காக கொண்டாட ஒன்றும் இல்லை. […]

#BJP 2 Min Read
Default Image

குஜராத் தேர்தல் : பாஜக 99, காங்கிரஸ் 80, மற்றவை 3

குஜராத்தில் தேர்தல் முடிவுகள்  முழுவதும் வெளியாகி உள்ளன. அதில் ஆளும் பாஜக அரசு 99 இடங்களை கைபற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி80  இடங்களை கைப்பற்றியுள்ளது. சுயேச்சையாக 3 வேட்பாளர்கள் வென்றுள்ளனர். சுயேட்சையாக போட்டியிட்ட  காங்கிரசின் ஆதரவுடன் களமிறங்கிய தலித் நல ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி 84,785வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரைவிட   18,839 வாகுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  

#BJP 2 Min Read
Default Image

வெற்றி குறித்து பாஜக தலைவர் அமித்சா மற்றும் மோடி கருத்து

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வெற்றி வாகை சூடி, அரியணையேற தயாராக உள்ளது. இதனால் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் பொருட்டு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஸா ஆகியோர் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளனர். பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்த கருத்து, ‘பாஜகவுக்கு வெற்றியை தந்த குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி. மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும், நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்.’ என பிரதமர் டிவிட்டரில் உறுதி அளித்துள்ளார். தேர்தலில் […]

#BJP 3 Min Read
Default Image

தேர்தல் குறித்து ராகுல் காந்தி கருத்து : மக்களின் கருத்தை ஏற்றுகொள்கிறோம்

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய இரு மாநிலத்திலும்  பாஜக வெற்றியடைந்துள்ளது. அதற்க்கு  ஓரளவு கடும் சவாலாக அமைந்தது காங்கிரஸ் கட்சி. இரு மாநிலத்திலும் அரியணை ஏற உள்ளது. இதனை குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இரு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க உள்ள புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத், இமாச்சல பிரதேச மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு நான் நன்றி […]

#BJP 2 Min Read
Default Image

5.15வரை தேர்தல் நிலவரம் : குஜராத், இமாச்சல் பிரததேசம்

குஜராத் தேர்தல் வெற்றி, முன்னிலை நிலவரம் : பாஜக : முன்னிலை -0 வெற்றி-99 காங்கிரஸ் : முன்னிலை-1 வெற்றி-79 மற்றவை : முன்னிலை-0 வெற்றி-3 இமாச்சல் பிரதேஷம்  தேர்தல் வெற்றி, முன்னிலை நிலவரம் : பாஜக : முன்னிலை -7 வெற்றி-37 காங்கிரஸ் : முன்னிலை-3 வெற்றி-17 மற்றவை : முன்னிலை-1 வெற்றி-3   மேலும் படிக்க source- www.dinasuvadu.com

1 Min Read
Default Image

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் தியோக் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராகேஷ் சின்கா வெற்றி.

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் தியோக் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராகேஷ் சின்கா வெற்றி.இமாசலப்பிரதேசத்தில் சிபிஐஎம் 16 ஆயிரத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் தன்னந்தனியாக நின்று வென்றது. சிபிஐ (எம்) யின் ராகேஷ் சிங்கா ஹிமாச்சலப் பிரதேசத்தின் திமோக் சட்டமன்ற தொகுதியில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 1993, 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தேர்தலில் ஷிம்லா மாவட்டத்தில் உள்ள தியோக் தொகுதியில் வெற்றி பெற்ற ராகேஷ் ஷர்மா இரண்டாவது இடத்தைப் […]

cpim 4 Min Read
Default Image

மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் எண்ணிக்கையை பொய்யாக காட்டி மாணவர்களின் நலத்திட்டங்களில் முறைகேடு நடப்பதை தடுக்க ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தகவலை அரசு உருவாக்கி உள்ளது. ஆதலால் கல்வித்துறை கொடுத்துள்ள எமிஸ் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை இந்த மாதம் 31ஆம் தேதிக்கு முன்னர் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

#School 1 Min Read
Default Image

4.10 வரை குஜராத், இமாச்சல் வெற்றி முன்னிலை நிலவரம்

குஜராத் தேர்தல் முன்னிலை நிலவரம் : பாஜக : முன்னிலை- 2 வெற்றி-96 காங்கிரஸ்: முன்னிலை-5  வெற்றி-76 சுயேச்சை : முன்னிலை-1  வெற்றி-2 இமாச்சல் பிரதேஷம் தேர்தல் முன்னிலை நிலவரம் : பாஜக : முன்னிலை-12  வெற்றி-32 காங்கிரஸ் : முன்னிலை-3  வெற்றி-17 சுயேச்சை : முன்னிலை-1  வெற்றி-3

#BJP 1 Min Read
Default Image
Default Image

இனி 1 மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் இலவச தரிசனம் : டைம் ஸ்லாட் முறை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை தினமும் அதிகமாகத்தான் இருக்கும். கோயிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் எப்போதும் சுமார் 4 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை குடோன்களில் தங்கவைக்க படுகின்றனர். அதனை தடுக்க தற்போது டைம் ஸ்லாட் தரிசன அட்டை முறையை பயன்படுத்தலாம் என திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்படி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு தரிசன நேரம், தேதி குறிப்பிட்டு டைம் ஸ்லாட் அட்டை கொடுக்கப்படும் அதன்படி 1 மணி நேரத்தில் இலவச தரிசனம் […]

india 4 Min Read
Default Image

வெளிநாட்டு செல்போன்களுக்கு வரி திடீர் உயர்வு!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனமான  பொருட்களுக்கு  செல்போன்களின் சுங்கவரி (customs duty ) 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால்  கலர் டிவி மற்றும்  மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட சாதனங்களின் சுங்கவரி 10% இருந்து 20% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்  உள்நாட்டு உற்பத்தி உயரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

mobile phone 1 Min Read
Default Image
Default Image

முழு இந்துத்துவ மாநிலமாக மாறும் உத்திர பிரதேசம் : இந்து மாணவர்களுக்கு கிருஸ்துமஸ் தடை

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்ததின் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசு கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசுவது. பள்ளி கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசுவது. இவ்வாறு இந்துத்துவ கொள்கைகளை பலமாக பரப்பி வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் அலிகாரில் கிருஸ்துவ பள்ளிகள் அதிகமாக உள்ளது. விரைவில் கிருஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளதால், பள்ளிகளில் கிர்ச்துமஸ் விழாக்கள் நடத்த ஏற்பாடு நடக்கிறது. அந்த விழாக்களில் இந்து மாணவர்களை அனுமதிக்க கூடாது என இந்துத்துவ அமைப்புகள் […]

#BJP 2 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர்ராவின் பேத்தி திருமணத்தின் திருமண செலவு சுமார் ₹100 கோடி!

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின் பேத்தி திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.இந்த திருமணத்தின்  பொது மணமக்கள் அணிந்திந்திருந்த தங்க, வைர நகைகளின் மதிப்பு ₹ 70கோடி எனவும்,அவரது பேத்தியின் மொத்த திருமண செலவு சுமார் ₹100 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.   மகாராஷ்டிராவின் ஆளுநரானா இவர்,தமிழகத்தின் ஆளுநர் ரோசையாவின் பதவிக்கு பிறகு பொறுப்பு ஆளுநராக இருந்தவர்.இவர் இந்தியாவை ஆளும் பாஜகவை சார்ந்தவர் ஆவர்.தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமானவர் ஆவர்.இவரது […]

#Politics 2 Min Read
Default Image