காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொலை தொடர்பாக, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது – பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ். தமிழக போலீசாருக்கு, ராஜஸ்தான் போலீஸ் உறுதுணையாக இருக்கும் – தீபக் பார்கவ்
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றபோது மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார் துப்பாக்கி சூட்டில் கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் என்பவருக்கு படுகாயம்
ஒக்கி புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் மீட்பு பணிகளை துரிதபடுத்தவும் கோரியுள்ளார்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பிரதமர் சபர்மதி ஆற்றிலிருந்து ஒரு கடல் விமானத்தில் இப்போது பறந்து கொண்டிருக்கிறார். இந்த விமானம் தண்ணீரிலிருந்து டேக் ஆஃப் ஆகிப் பறக்கும். 125 கோடி இந்தியர்களுக்கு இந்த விமானம் பயனளிக்கும் என்கிறார் அவர். வளர்ச்சியின் அடையாளமாக இது காட்டப் படுகிறது. அனைத்து டெலிவிஷன் சானல்களும் குதூகலாமாகக் குதித்துக் கொண்டிருக்கின்றன. சில சானல்களில் இதற்கு காங்கிரஸ் என்ன பதில் சொல்லப்போகிறது; இதுதான் வளர்ச்சி என்று கூவிக் கொண்டிருக்கின்றன. கடல் விமானத்தில் […]
அடுத்தாண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான கேள்வி தாள்களை வழங்கியதோடு ,மட்டுமில்லாது தேர்வு அறைக்கு செல்ல உடை,அணிகலன் என பல கட்டுபாடுகளை விதித்தது சர்ச்சைக்குரிய செயலாகவும் இருந்தது. மேலும் இது அடித்தட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் என பல எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் போராட்டம் நடத்தின.பல வழிகளில் […]
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் விசாரித்து முடிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு சம்மதம் தெரிவித்து மத்திய சட்ட அமைச்சகம் பதில் மனு.
குஜராத் மாநிலத்தில் தேர்தல் முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட தேர்தல் வருகிற 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து கட்சி தலைவர்கள் இன்று இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். குஜராத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ரோட்டில் பிரசாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநில பிரசாரத்திற்காக அகமதாபாத்தில் முதன்முறையாக நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்கிறார். சபர்மதி ஆற்றில் இருந்து […]
ஜம்மு காஸ்மீரில் தற்போது கடும் பனிபொழிவு பெய்துவருகிறது. இதனால் அங்கு எல்லையில் வேலை பார்க்கும் ரானுவ வீரர்கள் கடும் அவதிக்கு உட்படுகின்றனர். பண்டிபோரா எல்லை பகுதியில் எல்லை கட்டுபாட்டு கோட்டின் குரேஸ் செக்டரில் பணிசரிவு ஏற்பட்டது. இந்த சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளார். மயமான ராணுவ வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக மற்ற இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மும்பையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் அசெர்பைஜான் நகரில் உள்ள பாகு நகருக்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிறகு என்ஜினியர்கள் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இங்கிலாந்தில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக விமானம் மும்பையில் இருந்து தாமதமாகவே புறப்பட்டு சென்றது. இங்கிலாந்து நாட்டில் […]
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு * கட்சி தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஒருமனதாக ராகுல் தேர்வு. * கட்சியின் தேர்தல் அதிகாரி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்….
குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் முதலமைச்சராக அகமது படேல் வரவேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ முன்னாள் ஜெனரல் ரபீக் விருப்பம் தெரிவித்துள்ளது சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது – பாஜக செய்தி தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் .இந்நிலையில் அவரது மனுவானது உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. மனு மீதான விசாரணையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓகி புயலால் தென் தமிழகம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது, கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் இன்னும் வீடு திரும்ப மடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற ஓகி புயல் அடுத்து கேரளாவை நோக்கி சென்றது. இதனால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டது. ஏற்கனவே ஒகி புயலால் கேரளாவில் 40 பேர் பலியாகினர். இந்நிலையில் நேற்று கொச்சி கடற்கரையில் அழுகிய நிலையில் மிதந்த 2 பேர் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் ஒகி புயலுக்கு கேரளாவில் பலியானவர்களின் எண்ணிக்கை […]
“ராமர் கோயிலா அல்லது மசூதியா – எது உங்களுக்கு வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்” – குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி இப்போது மேடைக்கு மேடை முழங்குவது. பல மதத்தவர்கள் வாழும் ஒரு நாட்டின் பிரதம மந்திரி மதச்சார்பற்றவராக இருக்கவேண்டும் – அல்லது அப்படியாவது வெளியே காட்டிக் கொள்ளவேண்டும். ஆனால் இவர் இப்படி வெளிப்படையாகவே தான் ஒரு இந்துத்துவ வாதிதான் என்று பறை சாற்றுகிறார்.இந்திய அரசியலமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே இவரெல்லாம் […]
1998ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக திருமதி சோனியா காந்தி அவர்கள் பொருப்பேற்றர்.அவர் தலைவராக பொறுப்பேற்று 19 வருடங்கள் ஆகின்றன. கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் நிலவரங்களில் ஈடுபடாமல் இருந்து வருகிறார், இந்த இடைப்பட்ட காலங்களில் காங்கிரஸ் கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவரது மகன் ராகுல் காந்தி தான் எடுதுவந்துள்ளர். இந்நிலையில் ராகுல் காந்தி இன்று காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்படலாம்,என்றுகாங்கிரஸ் அரசியல் வட்டாரங்களில்எதிர்பர்கபடுகிறது. கட்சியின் தலைவருக்காக போட்டி ஈடுவதற்கு வேட்புமனுதாக்கல் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பாராமுல்லா மாவட்டத்தில் ஹந்த்வாரா பகுதியில் நேற்று இரவில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதைனையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள்மீது பதில் தாக்குதல் நடத்தினர். சில மணி நேரம் இந்த தாக்குதல் நீடித்தது. நடந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படதாக […]
அகமதாபாத் வீதிகளில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு – அகமதாபாத் போலீஸ் அதிரடி . சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொண்டு இருவரும் பிரசாரம் செய்ய தடை – அகமதாபாத் போலீஸ்.
ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வளைந்தளங்களில் என்றைக்குமே சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தான் அதிகமான பின்தொடர்பாளர்களுடன்(followers) முன்னணியில் இருப்பார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 37.5 மில்லியன் ஆதரவாளர்களுடன் இந்தியாவில் ட்விட்டரில் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி. இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகமான பின்தொடர்பாளர்களை (followers) கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் பத்து பிரபலங்கள்: இந்திய பிரதமர் நரேந்திரமோடி நடிகர் அமிதாப்பச்சன் நடிகர் ஷாருக்கான் நடிகர் சல்மான்கான் நடிகர் அக்ஷய்குமார் […]
ராமேஸ்வரத்திற்கு யாத்திரை வந்த ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியர்களிடம் கொள்ளை. ரூ.18,000 மற்றும் பொருட்கள் கொள்ளை போனதால் காவல் நிலையத்தில் தஞ்சம்.
அசாமின் ஜோர்கட் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் கணவரின் உடல்நிலை சரியில்லாததால் சில மருந்துகளை வாங்குவதற்காக வீட்டிலிருந்து மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்க வேண்டியதாக உள்ளதால் 55 வயதுடைய நா-அலி போலியகாய்ன் புக்கிரி என்ற குடும்ப நண்பரிடம் தங்களது 6 வயதுடைய பெண் குழந்தையை விட்டு சென்றிருக்கிறார் அவரது பெற்றோர்கள்.குழந்தை என்று கூட பாராமல் அந்த பச்சிளம் பெண் பிள்ளையை கற்பழித்திருக்கிறார் அந்த முதியவர். பின்பு மருந்தகத்தில் மருந்து வாங்கிவிட்டு பெற்றோர்கள் வீடு திரும்பி வந்தபோது,அந்த பெண் […]