வேலையில்லா திண்டாட்டத்தை போக்க தொழிற்சாலை முக்கியமல்ல; விவசாயம் ஓன்று போதும் வேலையில்லாத் திண்டாட்டமே இருக்காது – அன்னா ஹசாரே
பாரதிய ஜனதா கட்சியானது, ஆண்ட இந்த மூன்றரை ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் 3,755 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராம்வீர் தன்வர் என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவலை அவர் பெற்றார். இதனை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரை, பாஜக அரசானது, விளம்பரங்களுக்கு மட்டும் […]
குஜராத்தில் தேர்தல் களம் படு பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. இதில் குஜராத் பகுதியில் முதல் கட்ட வாக்குபதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ்சும் கடும் போட்டி போட்டு வருகின்றனர். காங்கிரசுக்கு ஆதரவாக பட்டேல் சமூகத்தினர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் ஆதரவும் வெகுவாக பெருகி வருகிறது. இந்நிலையில் குஜராத் தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அதிகமுறை ராகுல் பெயரை உச்சரித்து விமர்சனம் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி […]
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா, ராஜ்நாத் சிங்குடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு. புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மத்திய அமைச்சர்களிடம் பினராயி விஜயன் நேரில் வலியுறுத்தல்
உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பதவி வகித்த பின்பு அரசு கட்டிடங்கள் பெரும்பாலும் காவி வண்ணத்திலேயே காட்சியளிக்கின்றன. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது போதாதென்று, தற்போது அரசு பள்ளிகளுக்கும் காவி வண்ணம் பூசி மேலும் இந்து மதவாத சர்ச்சைக்கு வலு சேர்த்துள்ளது பாஜக அரசு. இந்த காவி வண்ணம் பூசப்பட்ட பள்ளிகள், உத்திரபிரதேச மாநிலத்தில் பிலிபட் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள 100 துவக்க பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் நடத்திய […]
ஒகி புயல் பாதிப்புக்கு நிதி கேட்டு பெற கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி செல்கிறார் மாலை 5 மணிக்கு புயல் சேதம் குறித்த அறிக்கையை ராஜ்நாத்சிங்கிடம் அளித்து நிதி உதவி கோருகிறார்
தூத்துக்குடி:ஒகி புயலில் சிக்கி உயிழந்த தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ளார்.இறந்த அந்த மீனவரது உடலானது நாளை காலை தூத்துக்குடி வந்தடையும் பின்பு அவருக்கான இறுதிசடங்கு நடைபெறும் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு […]
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குஜராத் பிரச்சார கூட்டத்தில் பேசிய போது, ‘எங்கள் காங்கிரஸ் கட்சியானது பாரத பிரதமர் மோடியை மதிக்கிறது. அதனால் தான் மணிசங்கர் அய்யர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதம மந்திரி பதவிக்கு காங்கிரசு மரியாதை செலுத்துகிறது. தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி கட்சியில் யாரும் அவருக்கு எதிராக பேச முடியாது. பிரதம மந்திரி மோடியும் எங்களைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது, நாங்கள் மணிசங்கர் அய்யர் மீது கடுமையான நடவடிக்கை […]
ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என நமது இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் தற்போது உணவுத்துறை இதனை மறுத்துள்ளது. இதனால் ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டால் ஜனவரி மாதம் முதல் ரேசன் பொருட்கள் வழங்கபடாது. இந்த வருடம் டிசம்பருக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் எனவும், அதலால் ஜனவரி முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கபடாது. எனவே இதுவரை ஸ்மார்ட் கார்ட்-க்கு விண்ணபிக்காதவர்கள் விண்ணபிக்க உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ரேசன் பொருட்கள் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கும், வாங்காதவர்களுக்கும் அடுத்தவருடம் ஜனவரி முதல் ரேசன் கடைகளில் ரேசன் பொருட்கள் வளங்கபடாது என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது மத்திய உணவுதுறையானது, ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
வங்கிகணக்குடன் ஆதார் நம்பர், பான் நம்பர் இவற்றை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவித்து இருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆதார் எண், பான் நம்பர், இணைக்க மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் 139 சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க காலஅவகாசம் நீட்டிக்க முடிவு செய்து இருப்பதாகவும் முறைப்படி அறிவிப்பாணை வெளியிடப்படும் எனக்கூறியுள்ளது.
வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பின்னர் ஓகி புயலாக வலுபெற்று கன்னியாகுமரி, மற்றும் தென் மாவட்டங்களை புரட்டி போட்ட புயல் குமரி கடற்கரையை விட்டு கேரளா நோக்கி நகன்றது. இதனால் அங்கு பலத்த சேதம் உருவானது. அதேபோன்று கேரளத்தின் சில பகுதிகளிலும் பலத்த சேதத்தை ஒகி புயல் ஏற்படுத்தியது. மேலும், கடலுக்குள் சென்ற மீனவர்களில் சிலர் நீரில் மூழ்கி இறந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கேரளத்தின் ஆலப்புழா கடல் பகுதியில் நேற்று காலை 3 […]
டெல்லி : டெல்லி கிளப் ஒன்று அங்கு வேலைபார்த்த ஊழியரான சுரேஷ் குமார் என்பவரை வேலையிலிருந்து நீக்கியது. இந்த நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அவர் கிளப்பை மாபியா கும்பல் ஒன்று இயக்குவதாக உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும், அந்த கிளப்பில் சூதாட்டம் நடப்பதாகவும் புகார் அளித்தார். இதை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், கிளப்பில் சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடினால் அது குற்றமல்ல என கூறியது. மேலும் பொய் […]
கேரளா மாநிலத்தில், மது அருந்துவோரின் குறைந்தபட்ச வயது 23 ஆக உயர்த்த என்று கேரளா முதலமைச்சர் பிரணாயி விஜயன் தலைமையில் நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே மதுகுடிப்போருக்கான குறைந்தபட்ச வயது 21ஆக இருந்தது. இதற்காக உரிய சட்ட திருத்தம் செய்வதற்க்காக அவசர சட்டம் பிறப்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்குமாறு கவர்னர் பி.சதாசிவத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் இனி கேரளாவில், 23 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் […]
ராணுவம் அரசியலில் இருந்து விலகி இருக்கவேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார். இவர் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறியதாவது, “ராணுவம் அரசியலில் இருந்து எப்படியாவது விலகி இருத்தல் வேண்டும். சமீப காலமாக ராணுவம் அரசியல் சார்புடையதாக மாறி வருவதைப்பார்க்கிறோம். இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டதாக ராணுவம் இருக்க வேண்டும். அதுவே ஒரு ஜனநாயக நாட்டுக்கு அவசியம் ஆனது ஆகும். கடந்த காலங்களில் ராணுவத்தில் […]
காஷ்மீரில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு அங்குள்ள வீடுகள் லேசாக குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை. இதற்கு முன்னல் நேற்று, இமயமலை பகுதியில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் நேற்று இரவு 8.49 மணிக்கு திடீரென பூமி அதிர்வு ஏற்பட்டது. இந்த பூமி அதிர்ச்சி ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. பூமிக்கு அடியில் 30 […]
ஒக்கி புயலில் உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தந்த கேரன முதல்வர் பினராய் விஜயன். ஒகி புயல் வருவதற்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்கவும் புயலில் சீக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் உடலை பெறுவது தொடர்பாக தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) தூத்துக்குடி மாவட்ட குழு செய்து வருகிறது. இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு வர கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்களோடு CPIM […]
உச்சநீதிமன்றமானது, மறுமணம் மற்றும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதில் செயல்படாத அரசுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கைவிடப்பட்ட விதவைகளின் நலனுக்கும் மறுவாழ்வுக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மறுமணத்துக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நீதிமன்றம் ஆய்வு செய்தது. இந்நிலையில் செயல்படாத அரசுக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” ”இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை இலங்கை கடற்படையால் தடுக்க முடியவில்லை” மேலும் அப்படி எல்லையை மீறி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கடுமையான தண்டனைகளை வழங்க இலங்கை அரசு உத்தரவிட வேண்டும் என வடக்கு மாகாண எம்.பி சரவணபவன் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 நாடு முழுவதும் பதற்றமான நாளாக ஆண்டு தோறும் கருதப்படுகின்றது இந்நாளை முஸ்லிம்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர் இந்நாளில் இஸ்லாமிய சகோதர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம் .அதனால் டிசம்பர் 5ம் தேதி முதலே போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபடுவர் .இதன் காரணமாக டிசம்பர் 6 என்றாலே போலீசாருக்கும் மக்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தும் . இப்படி ஒரு மிகப்பெரிய பதற்றமான நாளில் பட்டியல் […]