Categories: சினிமா

சர்ச்சைக்குரிய 10 காட்சிகள் அதிரடி நீக்கம்.! தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்…

Published by
கெளதம்

முன்னாள் முதல்வரின் பேட்டி உட்பட 10 காட்சிகளை நீக்கம் செய்யப்பட்டு, தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மே 5ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு  மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. தணிக்கை குழு 10 காட்சிகளை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது, அவற்றில் ஒன்று தான் கேரள முன்னாள் முதல்வர் ஒருவரின் பேட்டி.

The Kerala Story [Image source : jagran]

லதா சீனிவாசன் எழுதிய, இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கிய இந்தி திரைப்படமான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதில் இருந்தே சர்ச்சையில் இருந்து வருகிறது. மே 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம், 10 காட்சிகளை நீக்கிய காட்சிகளில் ஒன்று கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பேட்டி என்று கூறப்படுகிறது. நீக்கப்பட்டதாக நம்பப்படும் மற்றொரு காட்சியில் அனைத்து இந்து கடவுள்களைப் பற்றிய உரையாடல்கள் மற்றும் பொருத்தமற்ற குறிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சில டயலாக்குகளும் வெளிப்படையாக மாற்றப்பட்டுள்ளது.

The Kerala Story With Kerala CM [ file Image ]

வெளியிட்டிற்கு கடும் எதிர்ப்பு:

தற்போது கேரள அரசும், எதிர்க்கட்சித் தலைவர்களும் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் திரைப்பட விமர்சகர்கள் வேறுபட்ட கருத்தை தெரிவித்தனர். பார்வையாளர்கள் இறுதியில் OTT இல் படத்தைப் பார்ப்பார்கள், எனவே அதை தியேட்டர்களில் வெளியிடுவது நல்லது என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

kerala story controversy [File Image]

உச்சநீதிமன்றம் மறுப்பு:

இப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை கேட்டு நிசாம் பாஷா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், மனுதாரர் நிசாம் பாஷா கேரள மாநில உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Kerala Story [Image source : twitter/@ShashiTharoor]

ரூ.1 கோடி பரிசு:

32,000 மலையாளி பெண்கள், ஐஎஸ் தீவிரவாதிகளாக ஆக்கப்பட்டவர்கள் என்பதை நிரூபிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என கேரளாவில் உள்ள முஸ்லிம் யூத் லீக் அறிவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

18 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago