மும்பையை விட்டு வெளியே வந்த கெளதம் மேனன் & சிம்பு? அப்போ வெந்து தணிந்தது காடு ??

Published by
மணிகண்டன்

இயக்குனர் கெளதம் மேனன் எழுதி முடித்த வரையில் வெந்து தணிந்தது பட காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுவிட்டன.

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னனி இயக்குனர் பட்டியலில் முதன்மையாக இருந்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். அதன் பிறகு சொந்த தயாரிப்பில் படம் இயக்கி அது தோல்வி பெற்று, பின்னர் பெரும் கடனில் சிக்கி தவித்து வந்தார். அவரது இயக்கத்தில் உருவான திரைப்படங்களும் முழுமை பெறாமல் இருந்து வருகிறது.

இவர் தற்போது வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சிம்பு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார்.

கெளதம் மேனனுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அதாவது, படத்தின் கிளைமேக்ஸ் எழுதாமல் படம் இயக்க கிளம்பிவிடுவார். அப்போது என்ன தோன்றுகிறதோ அதனை கொண்டு படத்தை இயக்கி முடித்து விடுவார்.

தற்போது அதே நிலையில் தான் வெந்து தணிந்தது காடு திரைப்படமும் இருக்கிறது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது, கெளதம் எழுதி முடித்த காட்சிகள் வரை மட்டுமே மும்பையில் படமாக்கப்பட்டுள்ளதாம். மீதி படம் கெளதம் மேனன் படத்தை முழுதாக எழுதினால் மட்டுமே படமாக்க முடியும் என்கிற நிலையில், படக்குழு தற்போது மும்பையில் இருந்து திரும்பி சென்னை வந்துவிட்டதாம்.

விரைவில், படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் மீண்டும் மும்பையில் நடைபெறும் என கூறப்படுகிறது. கெளதம் மேனனின் இந்த படம், துருவ நட்சத்திரம் போல ஆகிவிட கூடாது என ரசிகர்கள் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

16 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

17 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago