DKShivakumar [Image Source : Jothimani]
பெங்களூருவில் இன்று நடைபெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் பெற்ற 135 இடங்கள் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. மேலும், “எக்காரணம் கொண்டும் எனது வீட்டிலோ அல்லது கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வீட்டிலோ தொண்டர்கள் கூட வேண்டாம். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்” என்று கூறினார்.
கர்நாடகாவின் புதிய துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார், 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாரளுமன்ற தேர்தலுக்கு அமைதி காத்து உழைக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றும் முக்கியமான நேரத்தில் சரியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வலுவான நிர்வாகத்தை வழங்க வேண்டும். இனி ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட வேண்டும், நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இது ஒரு ஆரம்பம், ஒரே ஒரு வெற்றியில் சோம்பேறியாகிவிடாதீர்கள்.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி ஆளும் பாஜகவை வெற்றி பெற்றது. தற்போது, கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் சனிக்கிழமை பதவியேற்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…