Categories: இந்தியா

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024இல் வெற்றி பெற வாய்ப்பு; சுப்ரமணிய சுவாமி கருத்து.!

Published by
Muthu Kumar

பிரதமர் மோடிக்கு வெளிநாடு செல்ல நேரமிருக்கிறது, மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை என சுப்ரமணிய சுவாமி கருத்து.

நாட்டில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி, நேரில் சென்று வன்முறை சம்பவத்தை தடுத்து நிறுத்தும் வழியை செய்ய வேண்டும், பிரதமருக்கு இம்பாலுக்கு நேரில் செல்ல நேரம் கிடைக்கவில்லை என பாஜக மூத்த நிர்வாகி சுப்ரமணிய சுவாமி, மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பாஜக மூத்த நிர்வாகியான சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடு செல்ல நேரம் உள்ளது. ஆனால் மணிப்பூருக்கு செல்ல நேரம் இல்லை, இதனை வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறினார். பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிக் கூட்டம் குறித்து கேட்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் 2024 தேர்தலில் வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

பிரதமர் நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை, அவர் ஏதாவது செய்தார் என்று கூறுபவர்கள் எல்லாம் ஜால்ரா அடிக்கிறார்கள் என்று தெரிவித்த சுப்ரமணிய சுவாமி, நாட்டில் நமது கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்களும், முஸ்லீம்களும் கெடுத்துவிட்டு சென்றுள்ளனர், இதனால் இந்துக்களின் மத்தியில் மறுமலர்ச்சி வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் வாக்குகள் நமக்கு(பாஜகவுக்கு) கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

16 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

17 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

18 hours ago