மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்..! பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா பேட்டி..!

கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ள 136 தொகுதிகளில் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே வேலையில், ஆளும் பாஜக முன்னிலையில் உள்ள 63 தொகுதிகளில் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தற்பொழுது வரை காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், செய்தியர்களிடம் பேட்டியளித்த பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா, பாஜகவின் வெற்றிக்காக கடந்த 4 மாதங்களாக ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தேன், கர்நாடக மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், பாஜகவுக்கு வெற்றி மற்றும் தோல்வி புதிதல்ல. இந்த முடிவுகளால் கட்சி தொண்டர்கள் பீதியடைய தேவையில்லை. கட்சியின் பின்னடைவு குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்வோம் என்று பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா கூறியுள்ளார்.
“Victory and defeat aren’t new to BJP. Party workers need not be panicked by these results. We will introspect about the party’s setback. I respectfully accept this verdict,” says BJP leader BS Yediyurappa on the party’s defeat in #KarnatakaElectionResults pic.twitter.com/LYudJZGIcL
— ANI (@ANI) May 13, 2023