இனி ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிரடி ஆஃபர் கிடையாது – மத்திய அரசின் புதிய விதிகள்..!

Published by
Edison

ஆன்லைனில் ஆஃபர் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபடும் செயல்களை தடுக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் மோசடி விற்பனைகளை தடுப்பதற்காக,மத்திய நுகர்வோர் விவகாரங்கள்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகமானது,2020 நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகளில் பெரும் மாற்றங்களை செய்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.அதன்படி,

  • இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும்,கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்திற்கான ஊக்குவிப்புத் துறையில் (டிபிஐஐடி) பதிவு செய்ய வேண்டும்.
  • விசாரணை அல்லது பாதுகாப்பு அல்லது சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனத்துடன் வர்த்தக நிறுவனங்கள்,தங்களது தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  • நிறுவனங்கள் ஒரு குறை தீர்க்கும் அதிகாரி,ஒரு தலைமை அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும்.
  • இந்த விதிகளை மீறும் நிறுவனங்கள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ் தண்டிக்கப்படும்.
  • டிஜிட்டல் தயாரிப்புகள் உட்பட டிஜிட்டல் அல்லது மின்னணு நெட்வொர்க்குகள் மூலம் வாங்கப்பட்ட அல்லது விற்கப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
  • எனினும்,ஆன்லைன் வர்த்தக தள்ளுபடி விற்பனைக்கு எந்த தடையும் இருக்காது.ஆனால்,வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை,அடிக்கடி அதிரடி ஆஃபர் (ஃபிளாஷ்) விற்பனை நடவடிக்கைகளுக்கு அனுமதி கிடையாது.
  • எனவே,இந்த திருத்தங்கள் குறித்து ஜூலை 6 ஆம் தேதிக்குள் பங்குதாரர்கள் js-ca@nic.in என்ற மின்னஞ்சலுக்கு,கருத்துகளையும் பரிந்துரைகளை அனுப்பலாம்.”, என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Published by
Edison

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

13 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

14 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

15 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

15 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

16 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

17 hours ago