ஜிப்மர் மருத்துவமனையில் நாளை முதல் இயங்கவுள்ள வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு.
கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின், வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்தது. தற்போது வைரஸ் தொற்று குறைந்துள்ள காரணத்தால், நாளை முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவு திறக்கப்படவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலூரை சேர்ந்த மூவருடன் தொடர்பில் இருந்த 46 பேர்களில், 44 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை இவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை. மீண்டும் மறு பரிசோதனை செய்யப்படும் என்றும், இந்நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாத 61 பேரை கண்டறிந்து சுய கண்காணிப்பில் உள்ளனர் என்றும், அவர்களுக்கு நோய் அறிகுறி இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஜிப்மர் மருத்துவமனை வரும் மே 8-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வெளிப்புற நோயாளிகள் பிரிவு சேவைகளை தொடங்குகிறது. இச்சேவைகள் தொலைபேசி மற்றும் காணொலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தரப்படும் என்றும், சேவை வேண்டுவோர் ஜிப்மரின் 0413 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நேரில் வரவேண்டிய நோயாளிகளுக்கான நாள், நேரம் விவரமும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்ந நாளில் நோயாளியும், அவருடன் ஒருவர் மட்டும் ஜிப்மருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின் தான் மருத்துவமனை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…