உத்தரப்பிரதேசத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆராய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் 3-நாள் பயணமாக உத்தரப்பிரதேசம் சென்றுள்ளனர்.
இன்று உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தை சந்தித்து கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி உ.பி சட்டமன்றத் தேர்தலை சரியான நேரத்தில் நடத்த வேண்டும் என்று கூறியதாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படும். 2017 உபி சட்டமன்றத் தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகின. 2019 மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் 59% வாக்குகள் பதிவாகியிருந்தன. மக்களிடையே அதிக அரசியல் விழிப்புணர்வு உள்ள மாநிலத்தில் வாக்குப்பதிவு சதவீதம் ஏன் குறைவாக உள்ளது என்பது கவலைக்குரிய விஷயம் என தெரிவித்தார்.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் வாக்குச் சாவடிக்கு வர முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் வாக்களிக்க அவர்களின் வீட்டு வாசலைச் சென்றடையும். வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் என்று தெரிவித்தார். இது குறித்து இங்குள்ள சுகாதாரத்துறை செயலாளரிடம் பேசினோம். தேர்தல்கள் அறிவிக்கப்படும்போது, நிலைமையைப் பார்த்து இந்த பிரச்சினையில் குறிப்பாக வழிகாட்டுதல்களை வழங்குவோம் என தெரிவித்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…