பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன், நாடறியும் உங்கள் சேவை தொடரட்டும் என வாழ்த்தியுள்ளார்.
மேலும், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்மாதிரியான தலைமை அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை தான் தேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. நீண்ட, ஆரோக்கிய மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுங்கள் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…