பள்ளிகள் திறப்பது எப்போது ? இறுதி முடிவை அரசு அறிவிக்கும் – தெலுங்கானா முதல்வர்

Published by
Venu

பள்ளிகள் திறப்பது எப்போது ? என்று  இறுதி முடிவை அரசு அறிவிக்கும் என  தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த சமயத்தில் தான் நாட்டில் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தை பொருத்தவரை அங்கு 42496 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.13388 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ,28705 பேர் குணமடைந்துள்ளனர்.403 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்குஇடையில் அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் கொரோனா வைரஸ் காலத்தில் கல்வித்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.இந்த கூட்டத்தில் கல்வித்துறை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதன் பின்னர் முதலமைச்சர்  சந்திர சேகர் ராவ் கூறுகையில்,இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்புகள் ஆகஸ்ட் 17 முதல் தொடங்கும். மாநிலத்தில் பள்ளி எப்போது திறக்கப்பட வேண்டும், பாடங்களை எவ்வாறு  நடத்த  வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இறுதி முடிவை அரசாங்கம் விரைவில் எடுக்கும்.

 பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதற்கு யு.ஜி.சி மற்றும் ஏ.ஐ.சி.டி.இ வழிகாட்டுதல்களை பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது.அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற அரசு கல்வி நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து ஒரு workshop நடத்துமாறு  நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.

Published by
Venu

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

17 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

18 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

20 hours ago