Categories: இந்தியா

டெல்லியில் நியூஸ்கிளிக் செய்தி நிறுவன அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல்.!

Published by
மணிகண்டன்

டெல்லியில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து வைத்து இருந்தது.  இந்த வழக்கின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு அமலாக்கத்துறை நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது சோதனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து, அமலாக்கத்துறைக்கு எதிராக உத்தரவை பெற்றது. அதன் பெயரில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தது.

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் கடந்த 3  ஆண்டுகளில் 38 கோடி ரூபாய் வரையில் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கின் கீழ், டெல்லி சிறப்பு காவல் பிரிவினர், சட்டவிரோத செயல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் சோதனை மேற்கொண்டனர்.

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு சம்பந்தமான 30 இடங்கள் மற்றும் 8 பத்திரிகையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.  இந்த சோதனை நிறைவடைந்து தற்போது நியூஸ் கிளிக் செய்தி நிறுவன அலுவலகத்திற்குள் யாரும் நுழைய கூடாது. அங்குள்ள ஆதாரங்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு டெல்லி காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். மேலும், நியூஸ் கிளிக் பத்திரிகையாளர்கள் சிலரின் லேப்டாப்கள், கைபேசிகள் ஆகியவையும் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago