Categories: இந்தியா

2024-2025-இல் நாட்டின் பணவீக்கம் எப்படி இருக்கும்.? RBI ஆளுநர் பேட்டி.!

Published by
மணிகண்டன்

ரிசர்வ் வங்கி: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, இன்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் , 2024 – 2025ஆம் ஆண்டின் பணவீக்கம் பற்றி பல்வேறு தரவுகளை குறிப்பிட்டார். பணவீக்கமானது எந்தெந்த துறைகளில் எவ்வாறு இருக்கும் என கணித்து அதனை கூறி வருகிறார்.

அவர் கூறுகையில், நாங்கள் இப்போது பணவீக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் எனும் CPI பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் உணவுபொருட்கள் மீதான பணவீக்கமானது அதிகளவில் காணப்படுகிறது. அதனை எரிபொருள் உள்ளிட்ட மற்ற பொருட்களின் பணவீக்க அளவை கொண்டு இதனை ஈடுகட்டி வருகிறோம்.

ஓரளவு மிதமான நிலை இருந்தபோதிலும், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. சீசன் சரிவைத் தொடர்ந்து காய்கறிகளின் விலை கோடைகாலத்தில் உயர்வை சந்தித்தன. எரிபொருளின் பணபரிவர்த்தனை போக்கு முதன்மையாக மார்ச் தொடக்கத்தில் LPG விலைக் குறைப்புகளால் முன்னேறியது.

ஜூன் 2023 முதல் தொடர்ந்து 11வது மாதமாக நிலக்கரி பணவீக்கம் சற்று குறைந்து வருகிறது. சேவை துறைகளில் உள்ள பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.  பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் வெளிநாட்டு இறக்குமதியை கவனமாக கண்காணிக்க வேண்டும். உலக உணவுப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

தொழில்துறை உலோகங்களின் விலைகள் நடப்பாண்டில் இதுவரை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இந்தப் போக்குகள் நீடித்தால், பண்ணைகளுக்கான உள்ளீட்டுச் செலவு அதிகரிக்கும். மறுபுறம், இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்யும் என்ற முன்னறிவிப்பு வரும்கால வேளாண் பருவத்திற்கு நல்லதாக அமையும்.

கடந்த ஆண்டை விட கோதுமை கொள்முதல் அதிகரித்துள்ளது. உண்மையில், கோதுமை மற்றும் அரிசியின் தாங்கல் பங்குகள் குறிப்பிட்டதை விட அதிகமாக உள்ளன. இந்த முன்னேற்றங்கள் உணவுப் பணவீக்க உயர்வுக்கு, குறிப்பாக தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் மீதான பணவீக்கத்திற்கு சற்று குறைய அமையலாம்.

உலகளாவிய அரசியல் பதட்டங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் மீதான கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது. 2024-25க்கான CPI பணவீக்கம் 4.5% ஆகவும், முதல் காலாண்டில் 4.9% ஆகவும், இரண்டாம் காலாண்டில் 3.8% ஆகவும்,  மூன்றாம் காலாண்டில் 4.6% ஆகவும் மற்றும் நான்காம் காலாண்டில் 4.5% ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் GDP வளர்ச்சிக் கணிப்பின் அளவு 7% லிருந்து 7.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கக் கணிப்பு ஓர் ஆண்டுக்கான சராசரி என கடந்த MPC கூட்டத்தில் ஆலோசித்து இருந்ததை போலவே, 4.5% ஆகத் தக்கவைத்துள்ளோம். நடப்பு ஆண்டிற்கான GDP கணிப்பு ஏன் அதிகரித்தது என்பதற்கு பல நல்ல காரணங்கள் உள்ளன என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago