Wrestlers Protest [Image source : Getty Images]
மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இல்லத்திற்கு போராட்டத்தில் ஈடுபடும் மல்யுத்த வீரர்கள் நேரில் வருகைபுரிந்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் , பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து அவரை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாய சங்கத்தினரும் வீரர்களுடன் உடன் போராட்டத்தில் களமிறங்கி உள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று கூறியிருந்தார். இதனை அடுத்து இன்று மல்யுத்த வீரர்கள் மத்திய அமைச்சர் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட வீரர் பஜ்ரங் புனியா, விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் மற்றும் வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள், முக்கியமாக 3 கோரிக்கைகளை முன் வைத்து உள்ளனர். அதில் முதலாவதாக பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்பட வேண்டும். விளையாட்டு துறை பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யபட வேண்டும். இனி வரும் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க ஓர் அமைப்பு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இன்னும் மத்திய அமைச்சர் உடன் பேச்சுவார்த்தை துவங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…