கிணற்றில் குதித்த தங்கை! காப்பாற்ற முயன்ற அண்ணன்! இருவருமே நீரில் மூழ்கி இறந்துவிட்ட சோகம்!

Published by
மணிகண்டன்
  • தாய் தந்தை சண்டையை தடுக்க முயன்று, அது முடியாததால் 17வயது சிறுமி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
  • தன் தங்கையை காப்பாற்ற அண்ணன் அருண்குமாரும் கிணற்றில் குதித்து விட்டார். இருவருமே நீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் வழுக்குப்பாறை பகுதியை சேர்ந்த முத்துச்சாமி – வேலுமணி தம்பதியினர் ஒரு தோட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் அன்றும் வழக்கம் போல சண்டை போட்டு கொண்டிருந்தனர். அவர்களது மகள் சித்ரா என்பவர் பெற்றோர்களின் சண்டையை தடுக்க முயன்றுள்ளார்.

மகளின் பேச்சை உதாசீனப்படுத்திவிட்டு மீண்டும் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா அருகில் உள்ள கிணற்றில் குதித்து விட்டார் என கூறப்படுகிறது. இதனை கண்ட சித்ராவின் அண்ணன் அருண்குமார் தங்கையை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்துள்ளார். இருந்தும்,  இருவருமே நீரில் மூழ்கி பலியாகி விட்டனர். அருண்குமாருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

14 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

15 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

15 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

16 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

16 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

18 hours ago