7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதா… விரைவில் நடவடிக்கை என ஆளுநர் உறுதி…

Published by
Kaliraj

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஐந்து  மூத்த அமைச்சர்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ – மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு  மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக இது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.  ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள நிலையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகிய 5 பேர் நேற்று மதியம் 12 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

இது தொடர்பாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும்,  மாணவ, மாணவிகள் கலந்தாய்வுக்கு  செல்கிற நிலையில் விரைந்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். அவரும், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். கண்டிப்பாக நல்ல முடிவை அறிவிப்பேன் என்ற தகவலை எங்களிடம் அவர் தெரிவித்தார். வழக்கமாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றும் எல்லா மசோதாக்களுக்கும் அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டியது அவரது கடமை. தற்போது  பரிசீலனையில் மசோதா இருக்கிறது. நாம் அவரை கட்டாயப்படுத்த முடியாது. அதனால் கவர்னரை நேரடியாக பார்த்து, தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம். எனவே, உள்ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மட்டும்தான் நம்முடைய மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பை படிக்க முடியும் என்ற கருத்தை நாங்கள் சொல்லி இருக்கிறோம். தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு  நடத்த வேண்டும் என்றால், 7.5 சதவீத இடஒதுக்கீடு வந்தால் மட்டுமே நடத்த முடியும் என்றும் சொல்லிவிட்டோம். என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Published by
Kaliraj

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

15 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

16 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

17 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

18 hours ago