Minister Ponmudi [File Image ]
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் போது ஒரு திமுக தொண்டரும் உள்ளே மாட்டிக்கொண்டார்.
இன்று காலை முதல் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு அலுவலகம், விழுப்புரத்தில் உள்ள பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
அப்போது சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்யும் போது அவரது வீட்டிற்கு திமுக தொண்டர் ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அந்த சமயம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற இருந்ததால் அவரது போனையும் அதிகாரிகள் வாங்கி வைத்துக்கொண்டு வெளியில் அனுப்ப மறுத்துவிட்டனர்.
பின்னர் அவரிடம் செல்போன் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர். அப்போது அந்த திமுக தொண்டர் கூறுகையில், நான் எங்கள் தொகுதியில் உள்ள கல்லூரி விஷயமாக மனு அளிக்க காலை 8 மணிக்கு வந்தேன். அப்போது வந்த அதிகாரிகள் எனது போனை வாங்கி வைத்து கொண்டு வெளியில் அனுப்ப மறுத்து விட்டனர். பின்னர், அவர்கள் சிறுது நேரம் கழித்து போனை கொடுத்து வெளியே அனுப்பிவிட்டனர். பின்னர் நான் அவர்களிடம் என்னிடமும் ஒன்றுமில்லை. இங்கிருந்தும் (அமைச்சர் பொன்முடி வீட்டில்) நீங்கள் கொண்டு செல்வதற்கு எதுவும் இல்லை என கூறிவிட்டு வந்துவிட்டேன் என அந்த திமுக தொண்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…