நீட் தேர்வு தாக்கம் குறித்த அறிக்கையை முதல்வரிடம் நாளை நீதியரசர் ஏ.கே ராஜன் குழு சமர்ப்பிக்கிறது.
நீட் தேர்வு எழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா..? என்பது குறித்து ஆராய்வதற்காக கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை தமிழக அரசு அமைத்தது. நீட் ஆய்வு குழு நியமனத்திற்கு எதிராக பாஜகவின் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடந்தார். நீட் ஆய்வுக் குழு அமைத்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு ஆய்வுக் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக இல்லை, மத்திய அரசு சட்டங்களுக்கு எதிரானதாகவும் நீட் ஆய்வுக் குழு அமைப்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவு நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், நீட் ஆய்வு குழு எதிரான மனு தள்ளுபடியானதால் முதல்வரிடம் நாளை ஏ.கே ராஜன் குழு அறிக்கையை சமர்ப்பிக்கிறது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86 ஆயிரத்து 342 பேர் ஏ.கே ராஜன் குழுவிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…