திமுக எம்.எல்.ஏ சரவணன் கடந்த 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் எம்எல்ஏ சரவணன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில், திமுக எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இன்று பாஜகவில் இணைந்த மருத்துவர் சரவணனுக்கு மதுரையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து, பாஜகவில் இணைந்த மருத்துவர் சரவணனுக்கு எதிராக பாஜகவினர் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட சரவணனுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு உடனே வாய்ப்பு வழங்குவதை எதிர்த்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…