அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – இன்று ஐகோர்ட்டில் விசாரணை!

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாஜியின் கைது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு திமுகவினர் மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினர் கொந்தளித்தனர். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது நீதிமன்றக் காவல் 6 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் 7வது முறையாக நீடிக்கப்பட்டு சிறையில் உள்ளார். மேலும், இதனிடையே, செந்தில் பாலாஜியை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தியிருந்தது. இதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது வரை வரை சிறையில் இருந்து வருகிறார்.

இந்த சமயத்தில், ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடலாம் என அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜூன் 16 மற்றும் செப்.20ம் தேதிகளில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டன. செந்தில் பாலாஜி உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. அதே வேளையில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறையும் வாதிட்டது.

இருதரப்பு வாதங்களும் முடிந்து வழங்கிய தீர்ப்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனுக்களை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்பின், ஒருசில நாட்கள் முன்பு சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்திருந்த நிலையில், நேற்று ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என ஐகோர்ட் நீதிபதி அறிவித்திருந்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இன்று விசாரணையில் அமலாக்கத்துறை தரப்பில் விசாரணைக்கு அவகாசம் கேட்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

அதேபோல் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்படும். இதனால், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது மறுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக, அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

14 minutes ago

மீண்டும் மீண்டுமா? இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…

43 minutes ago

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…

2 hours ago

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

3 hours ago

INDvsENG : இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி : காயம் காரணமாக விலகும் அர்ஷ்தீப் சிங்?

மான்செஸ்டர் : 2025 ஜூலை 20 அன்று, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்துக்கு…

4 hours ago

கள்ளக்குறிச்சி விபத்து : டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார்..4 பேர் பலி!

கள்ளக்குறிச்சி : மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அன்று நடந்த பயங்கர கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்…

5 hours ago