[file image]
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு இந்த மாதம் 60 வயது பூர்த்தி அடைவதை அடுத்து, வரும் 30ஆம் தேதி நாளை ஓய்வு பெற உள்ளார். அதனால், தமிழகத்தில் அடுத்த தலைமை செயலாளர் யார் என முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தி இருந்தார். அடுத்த தலைமை செயலாளர் பட்டியலில் 13 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சிவதாஸ் மீனா கவனிக்கும் நகராட்சி நிர்வாக செயலர் பதவி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், ஊரக வளர்ச்சித்துறை ஆணையராக உள்ள தாரேஸ் அகமது மாற்றப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. மேலும், பொதுத்துறை செயலாளராக நந்தகுமாரும், டிஎன்பிஎஸ்சி தலைவராக டிஜிபி சைலேந்திரபாபு நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இம்மாதம் தான் டிஜிபி சைலேந்திர பாபுவும் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…