பள்ளி மாணவர்களுக்குள் இருக்கையில் அமர்வது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு, அடிதடியாகி போலிஸ் வரை சென்றுள்ளது. அருப்புகோட்டை அருகே குலசேகரநல்லூர் செல்ல இரண்டு 17 வயது மாணவர்கள் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் அந்த பேருந்தின் டிரைவர் இருக்கை பின் புறம் அமர்ந்தனர். அதே பேருந்தில் வரும் பச்சேரி மாணவர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக பிரச்சனை வந்துள்ளது. இது அடிதடி வரை சென்று குலசேகரநல்லூர் மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அருப்புகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து […]
வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் நடந்த சோதனையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் அசுத்தமாக இருந்தது. இதனால் அந்த கம்பெனிக்கு ரூ.5000 அபராதமும், இதேபோல் அதேபகுதியில் ஒரு லெதர் கம்பெனியிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பொருட்கள் இருந்ததால் அந்த கம்பெனிக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர் இச்சம்பவம், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் பாலாஜி தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு தடுப்பு ஆய்வு மேற்கொண்டபோது நடைபெற்றது.
நேற்று நள்ளிரவில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா இருந்த போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்றது, அதில் சில லேப்டப்கள், பென்டிரைவ்கள், ஜெயலலிதாவிற்கு வந்த பல கடிதங்களை பறிமுதல் செய்துள்ளதாக T.T.V.தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் பேட்டியில் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, இந்நிலையில் இது குறித்து T.T.V.தினகரன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ரூமிற்கு சோதனையிட வேண்டுமென கூறினார், நான் வாரன்ட் இருக்கிறதா என கேட்டேன், அவர்கள் இல்லை என கூறியதால் […]
போயஸ் கார்டனில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது இரவு 9.30 மணிக்கு தொடர்ந்த சோதனை தொடங்கியது முதர்கட்டமாக அங்கு இருக்கும் அறைகளின் சாவி தினகரனிடம் இருப்பதால் அவரை அழைத்தனர் ,அடுத்தபடியாக போயஸ் கார்டனில் சோதனையை தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளனர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தில் நடைபெற்று வரும் வருமானவரிச் சோதனை குறித்து டிடிவி தினகரன் இது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்குச் செய்யப்படும் துரோகம் எனத் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “போயஸ்கார்டனில் […]
2010ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சந்தையூரில் தெற்கு தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் அஜித்குமார் (12).இவர் சத்திரம் வண்டிப்பாதையில் சைக்கிள் ஒட்டி கொண்டிருந்தபோது சைக்கிள் பளுதாகியதால் அதனை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எஸ்.கீழப்படியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஜோதிராஜ் (29) செல்போன் பேசியபடி ஓட்டி வந்து அஜித்குமார் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உயிரிழந்தார். இந்த வழக்கு பேரையூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த பேரையூர் மாஜிஸ்திரேட் ராஜமகேஷ், […]
திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 312 பேர் பங்குபெற்றனர். 120 பேர் பரிசு பெற தகுதிபெற்றுள்ளனர். திருச்சி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதனை கலக்டர் ராஜாமணி தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் வரவேற்றார். கலைபண்பாட்டுத்துறை துணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புன்னியமூர்த்தி, சிறப்பு ஒலிம்பிக் இயக்குனர் பால்தேவசகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி, நவ.17: திருச்சியில் நேற்று […]
திருச்சி: திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூரில் பங்குனி வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால் பாலங்கள் பழுதடைந்ததால் புதிதாக கட்டப்பட்டு வருகிறதன. அதலால் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்த பாலங்கள் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் பஸ்கள் சுற்றி செல்கின்றன. இதனால் பாலத்தின் அருகே தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தகோரி நேற்று பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்காலிக பாலமும் அடிக்கடி சேதமடைந்ததால் அங்கேயும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதலால் […]
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 72 ஆண்டுகளாக சேவை செய்துவரும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கமானது 2011ஆம் ஆண்டு முதல் வருடம்தோறும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை ஒன்றினைத்து திருச்சி யூனியன் என்கிற பெயரில் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. இந்த அமைப்பு 100 கிளைகளுடன் செயல்படுகிறது. அதன்படி இந்தாண்டும் காவிரி கறையின் இரு இடங்களிலும் நவம்பர் 16 (வியாழன்) அன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபசாலையில் காவிரி புஷ்கரம் நடந்த இடத்திலிலும் (கோனார் சத்திரம் எதிரில்) ஒரு […]
திருச்சி to சென்னை இடையே செல்லும் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் திருச்சி வழ் மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கும்பகோணம் மார்க்கமாக அகலபாதை பயணிகளுக்காக மாற்றப்பட்ட தடத்தை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மீட்டு 2015ஆம் ஆண்டு இறுதி முதல் திருச்சியிலிருந்து இயக்கபடுகிறது. ஆனால் தற்போது ரயில்வே துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கை காரணமாக மலைகோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலில் இந்த ரயில் அதி விரைவு வண்டி என கூறி […]
கேளம்பாக்கத்தை அடுத்துள்ள படூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற ஏழு வயது சிறுவன் தனது பள்ளிக்கூடத்தின் அருகிலுள்ள தமிழக அரசின் டாஸ்மாக் கடையை எதிர்த்து அதனை மூடக் கோரி போராட்டம் நடத்துகிறான். “அந்த அட்டையை தூக்கிப்போட்டுட்டு பள்ளிக்கூடம் போ. இல்லாவிட்டால் உன்னை தேச துரோக வழக்கில் கைது பண்ணிடுவேன்” என்று காவல்துறை அதிகாரி அவனை மிரட்டுகிறார்
எஸ்.வி.சேகர் 8 அக்டோபர் 2013 இல் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் இப்போது பா.ஜ.வின் செயலில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் அவர் கோபாலபுரம் போனதற்கு தி.மு.க. தலைவர் மு.கலைஞரை நலம் விசாரிக்கத்தான் சென்றார். அவர் உண்மையிலேயே உடல்நிலை தேறிவருகிறாரா, எல்லோரும் சொல்கிறார்களே என்று ஒரு சந்தேகம் அதனால் தான் நாங்கள் நலம் விசாரிக்க வந்தோம் என கூறினார்.
தமிழக அரசின் கைது நடவடிக்கையால் தான் சிறிதும் மனம் தளர வில்லை என்றும் அனைத்து மக்கள் மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவோடு எப்போதும்போல் அரசின் தவறுகளை விமரிசித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று சொல்கிற கார்ட்டூனிஸ்ட் பாலா தன்னைப்பற்றியே இந்த கார்ட்டூன் வரைந்துள்ளார். 23-10-17 என் வாழ்வை புரட்டிப்போடப்போகும் நாள் என்பது அப்போது எனக்கு தெரியாது.. அந்த காட்சியை நான் பார்க்காமல் இருந்திருந்தேன் என்றால் இந்த பதிவு எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காது. இதை எழுதும் இந்த நொடி […]
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள லூர்து சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு பயின்று வந்த சதீஷ் பாபு என்ற மாணவன் இன்று காலையில் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை கைதுசெய்ய வேண்டுமெனவும் மேலும் சேவியர் பள்ளியின் அங்கிகாரத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.
ஜெயா தொலைகாட்சி தலைமை நிர்வாகியும் ஜாஸ் சினிமாஸ் என்ற பெரிய நிறுவனத்தின் அதிபரும் ஆன விவேக் ஜெயராமன் என்பவர் சசிகலாவின் உறவினர் என்பதை விட புரட்சித் தலைவி ஜெயலலிதா கொள்ளையடித்து சம்பாதித்த சொத்துக்களின் பினாமி முதலாளி என்று சொல்வதே சரியாக இருக்கும். சுதாகரன் என்ற ஆளை வளர்த்தெடுத்து பின்னர் விரட்டிவிட்ட பின்னர் இந்த விவேக் ஜெயராமன்தான் ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத வளர்ப்பு மகனாக திகழ்ந்துவந்தார். ஜெயலலிதாவின் பெரும்பாலான சொத்துக்களுக்கு பினாமி அதிபர் என்றாலும் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் முழு […]
சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு செய்யப்பட்ட வசதிகள் அனைத்தும் உண்மை தான் என உயர்மட்ட குழு விசாரணையில் குரிப்பிடப்படுள்ளதாக தெரியவந்துள்ளது .இது தொடர்பாக கர்நாடகா காவல்துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டி விசாரணை குறித்து விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தையே பரபரப்பாக வைத்த ஓர் சம்பவம் சசிகலா, T.T.V.தினகரன் ஆகியோர் மற்றும் அவரது உறவினர்கள் என அவர்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலானோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ‘ஆப்பரேசன் க்ளீன் மனி’ என்ற பெயரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சசிகலா உறவினர்கள் பெரும்பாலானோர் தங்களது கார் டிரைவர், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் என பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். இது தொடர்பாக நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரி துறையினர் சார்பில் […]
நமது எம்ஜிஆர் பத்திரிகை அலுவலகத்தில் வருமானவரி சோதனை நிறைவடைந்தது. ஈக்காட்டுத்தாங்களில் உள்ள திவாகரன் வீட்டிலும் வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை தடத்தி வருகிறது.
சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றி பல ஆயிரம் கோடி சொத்துகளை சேர்த்துள்ளனர்.மேலும் சசிகலா உறவினர்கள் வீடுகளில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றனர் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.