[Image used for representative purpose only]
சிறைக்காவலர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி லால்குடி காவல் நிலைய வாசலில் செம்பரை கிராமத்தை சேர்ந்த சிறைக்காவலர் ராஜா தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உறவினர்களிடையே ஏற்பட்ட சொத்து பிரச்சனை தொடர்பாக சரியாக விசாரணை நடத்தவில்லை என கூறி சிறை காவலர் ராஜா தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
தீக்குளித்த சிறை காவலர் ராஜா, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறை காவலர் ராஜா தீக்குளித்த நிலையில், புகாரை சரிவர விசாரிக்கவில்லை என எஸ்ஐ பொற்செழியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பியின் பரிந்துரையின் பேரில் எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்து டிஐஜி சரவணசுந்தர் உத்தரவிட்டார்.
இதனிடையே, தனது சகோதரர், மனைவிம், மகள் தான் தனது மரணத்திற்கு காரணம் என உயிரிழந்த சிறைக்காவலர் ராஜா வாக்குமூலம் அளித்துள்ளதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்ஐ பொற்செழியன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…