தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளை இளைஞர்கள் படிக்க வள்ளலார் விரும்பினார்.! பிரதமர் உரை.!

Published by
மணிகண்டன்

இன்று வள்ளலாரின் 200வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளலாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை ராஜ்பவனில் (ஆளுநர் மாளிகை) வள்ளலாரின் சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி வள்ளலாரின் சிலையை திறந்து வைத்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவை காணொளி வாயிலாக கண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் வள்ளலாரின் பெருமைகளை குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களை மக்களிடம் தெரிவித்தார்.  அதில், தற்போதைய நவீன கல்விதித்திட்டத்திற்கு வள்ளலாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இளைஞர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற வள்ளலார் விரும்பினார். கடந்த 9 ஆண்டுகளில் கல்வி கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

3 தசாப்தங்களுக்கு பிறகு நமது நாடு தேசிய கல்வி கொள்கையை பெற்றுள்ளது. இளைஞர்கள் வட்டார மொழிகளில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை பயின்று வருகின்றனர்.  இதனால் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

வெள்ளாளர் காலத்திற்கு முன்னதாக சிந்தித்து செயல்பட்டவர். சமூக சீர்திருந்ததை வலியுறுத்தியவர். ஒவ்வொரு அணுவிலும் கடவுளை கண்டவர். சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்தும் வள்ளலாரின் கொள்கைகள் எனது மனஉறுதியை மேலும் வலுவடைய செய்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு வள்ளலார் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக வாழ்த்தியிருப்பார்.

வள்ளலாரின் கொள்கைகள் அனைவருக்கும் புரியும்படி எளிமையானதாக உள்ளது. அன்பு , இரக்கம், நீதி ஆகிய அவரது போதனைகளை நாம் பரப்புவோம். தரமான கல்வி , குழந்தைகளுக்கு வழங்குவோம், வள்ளலாரின் 200வது பிறந்தநாளில் அவருக்கு நான் மீண்டும் ஒருமுறை மரியாதை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார்.

Published by
மணிகண்டன்
Tags: #PMModi

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

17 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

18 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

20 hours ago