அரசியல்

பெண்களின் உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் – அமைச்சர் உதயநிதி

Published by
லீனா

மணிப்பூரில் 3 மாதங்களுக்கும் மேலாக சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் உதயநிதி ட்வீட்.

கடந்த சில மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய  நிலையில்,இந்த வன்முறையில் 100-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். பலர் தங்களது உறவுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, மணிப்பூரில் நடந்த இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அமைச்சர் உதயநிதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது; 3 மாதங்களுக்கும் மேலாக சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது; அங்கு அமைதியை மீட்டெடுக்கவும், பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்கவும் ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 minutes ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

17 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

18 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

18 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

19 hours ago