நாளை பாக்சிங் டே டெஸ்ட்.. மைதானத்தின் நிலவரம் இதோ..!

Published by
murugan

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறது. கேப்டன்கள் ரோஹித் சர்மா மற்றும் டெம்பா பவுமா பங்கேற்கும் பாக்சிங் டே டெஸ்ட்  சென்சூரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் சாதனைகளை பற்றி பார்க்கலாம். இந்த மைதானத்தில் நடைபெற்ற 28  போட்டிகளிலும் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 22 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வி 3 போட்டிகளில் டிரா செய்துள்ளது. மறுபுறம் இந்த மைதானத்தில் விளையாடிய  இந்தியா 3 போட்டிகளில் விளையாடி1 வெற்றியும், 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தமைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 330 ஆகும். 330 ரன்கள் கணிசமானதாக இருந்த போதிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா 2020 இல் இலங்கைக்கு எதிராக 621/10 என்ற அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. மாறாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2016 இல் 101/10 என்ற குறைந்த ஸ்கோரை இங்கிலாந்து பதிவு செய்ததுள்ளது. 2014ல் ஹசிம் அம்லாவின் 208 ரன்களே இந்த மைதானத்தில் சிறந்த தனிநபர் பேட்டிங் ஸ்கோராக உள்ளது. அதேபோல், 2016-ல் ககிசோ ரபாடா 144 ரன்களுக்கு 13 விக்கெட்டுகள் எடுத்தது சிறந்த பந்துவீச்சு பதிவு செய்துள்ளார்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

13 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

14 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

15 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

15 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

16 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

17 hours ago