முக்கியச் செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கருப்புபட்டை அணிந்து இறங்கிய ஆப்கானிஸ்தான் ..!

Published by
murugan

உலகக் கோப்பையின் 9-வது போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து களம் இறங்கினர்.

ஐசிசி உலகக் கோப்பை 2023-ன் 9-வது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் களத்தில் இறங்கியபோது அவர்கள் கையில் கறுப்புப் பட்டையை அணிந்திருந்து இருந்தனர்.

ஏன் அணிந்திருக்கிறார்கள்..? என ரசிகர்கள் ஒரு நிமிடம் யோசிக்க அதன் பின்னணியில் உள்ள காரணம் இறுதியாக தெரியவந்துள்ளது. தங்கள் நாட்டில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இதைச் செய்தனர்.  இரு அணி வீரர்களும் மைதானத்திற்குள் வந்தனர். அப்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் மௌன அஞ்சலி செலுத்திய பிறகு தேசிய கீத பாடல் ஒலிக்கப்பட்டது.

கடந்த வாரம் மேற்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனுடன் ஆப்கானிஸ்தானில் பெரும் சேதங்களுக்கும் ஏற்பட்டது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“அந்த மனசு தான் சார் கடவுள்”… முத்துக்குமார் குடும்பத்திற்கு பெரிய உதவிய செய்த சிவகார்த்திகேயன்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…

8 hours ago

பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?

சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…

10 hours ago

பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

11 hours ago

மீண்டும் மீண்டுமா? இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…

11 hours ago

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…

13 hours ago

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

14 hours ago