சுப்மன் கில் அதிரடி சதம்..! மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த குஜராத்..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச்சுற்று GT vs MI போட்டியில், முதலில் பேட் செய்த குஜராத் அணி 227/3 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதன்படி, குஜராத் அணியில் முதலில் களமிறங்கிய விருத்திமான் சாஹா 18 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அணிக்கு நல்லத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தார். அதன்பின் சாய் சுதர்சன் களமிறங்கினார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஒருபுறம் சாய் சுதர்சன் பொறுப்பாக விளையாட, சுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ஹர்திக் பாண்டியா, சாய் சுதர்சன் ஜோடி ரன்கள் எடுக்க, சுதர்சன் காயம் காரணமாக வெளியேறினார்.

இறுதியில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷித் கான் களத்தில் நிற்க, குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 129 ரன்களும், சாய் சுதர்சன் 43 ரன்களும், ஹர்திக் பாண்டியா 28* ரன்களும் குவித்தனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

17 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

18 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

20 hours ago