இந்தியா

சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட்.! சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்..தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

Published by
செந்தில்குமார்

இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 5ம் தேதித் தொடங்கியது. அதன்படி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் உலகக்கோப்பை தொடர் தொடங்கியது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்பிறகு இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் பாகிஸ்தான் 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றது. இன்று மூன்றாவது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியும், ஆப்கானிஸ்தான்  அணியும் ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் விளையாடி வருகிறது. ஆனால் இந்த போட்டிகளை விட ரசிகர்களுக்கு சென்னையில் நடைபெறும் போட்டிகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் உலகக்கோப்பைத் தொடரின் 5 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, அக்-8ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. அக்-13ம் தேதி நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீச்சை செய்ய உள்ளன. அக்-18ம் தேதி நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

அதே போல,  அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியும் அக்டோபர் 27ம் தேதி பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதவுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த போட்டிகளை காண்பதற்காக ரயில், விமானம் மூலம் பல பகுதிகளில் இருந்து பெருமளவில் வருவார்கள். ரசிகர்கள் அதிக அளவில் வரும்போது இப்போது இயக்கத்தில் இருக்கும் ரயில்கள் போதுமானதாக இல்லாமலா இருக்கலாம்.

இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் 8, 13, 18, 23 மற்றும் 27 ஆகிய 5 தேதிகளில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சிந்தாரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“அந்த மனசு தான் சார் கடவுள்”… முத்துக்குமார் குடும்பத்திற்கு பெரிய உதவிய செய்த சிவகார்த்திகேயன்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…

8 hours ago

பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?

சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…

10 hours ago

பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

11 hours ago

மீண்டும் மீண்டுமா? இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…

11 hours ago

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…

13 hours ago

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

14 hours ago