ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை துவங்கி வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பிரதான முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் ஏர்டல் நிறுவனம் மட்டுமே 5ஜி சேவையை சென்னையில் வழங்கி வருகிறது. தற்போது அதேபோல ,சென்னையில் தனது 5ஜி சேவையை இன்று ஆரம்பித்துள்ளது ஜியோ நிறுவனம். இன்று ராஜஸ்தானில் 5ஜி சேவையை ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார். […]
கூகுள் நிறுவனத்திற்கு, இந்திய போட்டி ஆணையம் (CCI) போட்டி சட்டத்தை மீறியதற்காக ரூ.1,337 கோடி அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் சாதன சந்தைகளில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், நியாயமற்ற வணிகத்தில் செயல்பட்டதாகவும், போட்டி சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டி அந்நிறுவனத்திற்கு கார்பரேட் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய போட்டி ஆணையம் ரூ.1,337 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் படி, ஆண்ட்ராய்டு மொபைல் சாதன தயாரிப்பாளர்களிடம் கூகுள் நிறுவனம், தனது கூகுள் ஆப்ஸ்களை […]
ஏர்டெல் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை டெல்லி, மும்பை, சென்னை போன்ற 8 நகரங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஏர்டெல் நெட்வொர்க் 30X அதிக வேகத்தை வழங்குவதாகவும் மற்றும் ஏற்கனவே உள்ள ஏர்டெல் சிம்களுடன் 5G-இயக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் கைபேசிகளில் வேலை செய்கிறது என்று கூறியுள்ளது. ஏர்டெல் 5ஜி பிளஸ் உலகில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்பத்தில் மிகவும் வளர்ந்த சுற்றுச்சூழல் அமைப்புடன் இயங்குவதாக தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை விட அதிக வாடிக்கையாளர்களுடன் முதலிடம். கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் சேவையில், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் ஐ விட அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. தொலைத்தொடர்பு துறை ஆரம்பித்த காலத்திலிருந்து, முதன்முறையாக இந்தியாவில் தனியார் நிறுவனம், பொதுத்துறை நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ரிலையன்ஸ் ஜியோ […]
ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபரின் தீபாவளி ஆஃபரை அறிவித்துள்ளது. ரூ.6500 வரை பலன்களை வழங்கவுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு ஜியோஃபைபர் டபுள் ஃபெஸ்டிவல் போனான்ஸாவை அறிவித்துள்ளது. இதன் படி, அக்டோபர் 18 முதல் அக்டோபர் 28 வரை ஜியோஃபைபர் இணைப்புகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ₹6,500 மதிப்புள்ள பலன்களை வழங்குகிறது. புதிய ஜியோ ஃபைபர் இணைப்பை 6 மாதங்களுக்கான ₹599 திட்டம் அல்லது ₹899 திட்டத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும். மேலும் […]
ஐபோன் களில் சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்து வருவதாக கூறி ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் ரூ.160 கோடி அபராதம் விதித்த பிரேசில். ஆப்பிள் நிறுவனம் சார்ஜர் இல்லாமல் ஐபோன் களை விற்பனை செய்து வருவதாகக்கூறி $20 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.160 கோடி) அபராதம் விதிப்பதாக பிரேசிலியன் நீதிபதி அறிவித்தார். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம், வாடிக்கையாளர்களை அந்நிறுவனத்தின் மேலும் ஒரு பொருளை வாங்க கட்டாயப்படுத்துகிறது என்று நீதிபதி மேலும் தெரிவித்தார். எலக்ட்ரானிக்ஸ் கழிவுகளைக் குறைப்பதற்கு […]
எனக்கு உயிர் இல்லாவிட்டாலும் என்னால் கலையை உருவாக்கமுடியும் என்று ரோபோட் ஐ-டா(Ai-Da) இங்கிலாந்து சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் உரையாற்றியது. புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு படைப்பு தொழில்களைப் பாதிக்கிறது என்ற கேள்விக்கு விளக்கமளிக்கும் விதமாக ஐ-டா(Ai-Da) என்றழைக்கப்படும் “ரோபோ கலைஞர்” பிரிட்டிஷ் பாராளுமன்ற சட்ட வல்லுனர்களிடம், விளக்கம் அளித்தது. அந்த ரோபோட் கூறியதாவது, நான் ஒரு செயற்கை உருவாக்கம் எனக்கு உயிர் இல்லை என்றாலும் என்னால் இன்னும் கலைகளை உருவாக்க முடியும் என்று பேசியது. உலகின் முதல் மனித […]
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து அதன் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா செய்துள்ளார். பிரபல ஐடி (IT) நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரவிக்குமார் ராஜினாமா செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குனர்கள், ரவிக்குமார் ஆற்றிய சேவையின் பங்களிப்பிற்கு பாராட்டுதல் அளித்துள்ளனர். ரவிக்குமார் தலைவராக இருந்தபோது இன்ஃபோசிஸ் நிறுவனம், அனைத்து தொழில் பிரிவுகளிலும் முன்னிலையில் இருந்தது. மேலும் அவர், டிஜிட்டல் பரிமாற்றம், ஆலோசனை, இன்ஜினியரிங், தரவு மற்றும் பகுப்பாய்வு (டேட்டா & அனாலிடிக்ஸ்), கிளவுட் மற்றும் இன்ஃபிரா […]
ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நேற்று ஒரே இரவில் ஃபேஸ்புக் பக்கத்தில் அனைத்து ஃபாலோவர்களையும் குறைத்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கின் ஃபாலோவர்களும் குறைந்துள்ளனர். ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, லட்சக்கணக்கான மக்களின் பின்தொடர்பவர்களைக் (ஃபாலோவர்களை) குறைந்துள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கும் விதிவிலக்கல்ல. அவரது ஃபாலோவர்களும் தற்போது 9993 ஆகக் குறைந்துள்ளது. இது குறித்து பல பயனர்களும் தங்களது புகார்களை பகிர்ந்து வருகின்றனர். இது ஒருவேளை ஃபேஸ்புக்கில் உள்ள பொய்யான பயனர் கணக்குகளை மூடுவதற்கான […]
மெட்டா நிறுவனம், முகநூலில் பயனர்களின் அக்கௌன்ட் மற்றும் கடவுச்சொல் விவரம் திருடப்படுவதாக, 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரித்துள்ளது. ஆப்பிள் ஸ்டோர்ஸ் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்ஸ் போன்றவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் சில செயலிகள்(Apps) ஃபேஸ் புக் மூலம் உள்நுழைய(Login) அனுமதி கேட்கிறது, இதனால் இந்த ஆப்ஸ்கள்(Apps) ஃபேஸ் புக் பயனர்களின் தகவல்களை எளிதாக திருடுவதற்கு வசதியாக இருக்கிறது என்று மெட்டா நிறுவனம் சமீபத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. மெட்டா நிறுவனம், இந்த ஆண்டு […]
ஜிபி வாட்சாப் செயலி மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் செயலி. இந்த வாட்டசாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பை விட சில கூடுதல் நன்மைகளையும் பயனர்களுக்கு வழங்குகிறது. ஆனால், அதே போல, கடந்த நான்கு மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர் (உளவுபார்க்கும் கோப்புகள்) கண்டறிதலின் பெரும்பகுதிக்கு இந்த ஜிபி வாட்சாப் காரணமாக இருக்கிறது என அறிக்கை வெளியாகியுள்ளது. மால்வேர் பாதுகாப்பு மற்றும் இன்டர்நெட் செக்யூரிட்டி நிறுவனமான ESET அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை அண்மையில் வெளியிட்டது. அதில் பல திடுக்கிடும் […]
தற்போது 5ஜி சிம், 5ஜி ஸ்மார்ட் போன் மாற்ற தேவையில்லை. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து சோதனை ஓட்டமாக 5ஜி சேவை சோதனை செய்யப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் தான் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக பிரதான முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது இதன் முதற்கட்ட வேலைகளை ஜியோ ஆரம்பித்துள்ளது. ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, […]
ஒரு காரை விட குறைவான விலையில் டெஸ்லாவின் மனித உருவ ரோபோக்கள்.. முன்மாதிரியை வெளியிட்டார் மஸ்க். டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், இன்று(அக் 1) நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ‘ஏஐ’ தின நிகழ்வின் போது, ‘ஆப்டிமஸ்’ என அழைக்கப்படும் மனித உருவ ரோபோவின் முன்மாதிரியை வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது, ரோபோ மேடையில் நடந்து வருவது, வணக்கம் வைப்பது மற்றும் நடனமாடுவது என பல திறமைகளை வெளிப்படுத்தியது. ‘ஆப்டிமஸ்’ என்ற இந்த ரோபோ குறித்து மஸ்க் […]
போலி ஆவணங்கள் வைத்து சிம் வாங்கினாலோ, வாட்டசாப், டெலிகிராம் போன்ற ஆப்களை பயன்படுத்தினாலோ 50 ஆயிரம் அபராதம் எனவும், அதனை கட்ட தவறினால் 1 வருடம் சிறை தண்டனை எனவும் மத்திய அரசு புதிய மசோதாவில் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு புதியதாக இந்திய தொலைத்தொடர்பு 2022 மசோதாவை கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவில் உள்ள விதிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், போலி ஆவணங்கள் வைத்து சிம் கார்டு வாங்குவது சட்டப்படி குற்றம் எனவும், அப்படி போலி ஆவணங்கள் வைத்து […]
வாட்ஸ்ஆப் குரூப் காலில் 32 பேர் வரை பேசுவதற்கான புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது, மெட்டா நிறுவனம். உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியானது, தன் பயனர்களுக்காக அவ்வப்போது பல புதிய அப்டேட்களைக் கொண்டுவருகிறது. இதன்படி மெட்டாவின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க், வாட்ஸ்ஆப் குரூப் காலில் இனி 32 பேர் வரை பேசமுடியும் என்று ஒரு புதிய அப்டேட்டைக் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளார். வரும்காலங்களில் வீடியோ காலிலும் 32 பேர் […]
ஸ்மார்ட்ஃபோன் கேமரா மூலம் உங்களது ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஸ்மார்ட்ஃபோன்களின் வளர்ச்சி தற்போது, அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வெறும், அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவது என்று இல்லாமல் உள்ளங்கையில் உலகத்தையே கொண்டு வந்திருக்கிறது இந்த ஸ்மார்ட்ஃபோன்கள். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் டியாகோவின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் ஃபிளாஷ் ஆல், இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை அளவிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர். […]
இன்ஸ்டாகிராம் டவுன் ஃபன்னி மீம்ஸ் மற்றும் ஜோக்குகள் ட்விட்டரில் வைரலாகும் புகைப்பட பகிர்வு. இந்தியா உட்பட பல நாடுகளில் இன்ஸ்டாகிராம் செயலிழப்பு நேற்று(செப் 22) ஏற்பட்டது. பேஸ்புக்கிற்கு சொந்தமான மற்றொரு துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் தவிர, வாட்ஸ்அப்-ம் சில பயனர்களுக்கு செயல்படவில்லை. இது குறித்து இணைய பயனர்கள் பிழை அறிக்கைகளைப் பகிர்வதற்கு பதிலாக, வேடிக்கையான மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகளைப் பகிர்வதன் மூலம் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை இன்ஸ்டாகிராம் 9வது முறையாக செயலிழப்பை எதிர்கொண்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. Me […]
போட்டிநிறுவனங்களுக்கு மறைமுகமாக வேலைப்பார்த்து வந்த 300 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள மிக பெரிய ஐடி நிறுவனங்களுள் ஒன்று விப்ரோ. இது மூன்லைட்டிங் குறித்து கடுமையாக எச்சரித்து வந்த நிலையில் தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மூன்லைட்டிங் எனப்படும் மற்ற போட்டிநிறுவனங்களுக்கு ரகசியமாக பணிபுரிந்து வந்த பல 300 ஊழியர்களையோ பணி நீக்கம் செய்து ஷாக் கொடுத்துள்ளது. இது குறித்து விப்ரோ நிவாக […]
பிரபல யூடியூப் (YouTube) நிறுவனம், ஷார்ட்ஸ் வீடியோ உருவாக்குபவர்களுக்கு அதன் விளம்பர வருவாயில் 45% சதவீதத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. கூகுளுக்குச் சொந்தமான யூடியூப் (YouTube) நிறுவனம், அதன் வளர்ந்து வரும் ஒரு பகுதியான ஷார்ட்ஸில் விளம்பரத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் ஷார்ட்ஸில், வீடியோ உருவாக்குபவர்களுக்கு 45 சதவீத வருவாய் அளிக்கவுள்ளது. டிக்டாக் போன்று யூடியூப்பிலும் படைப்பாளிகள், குறுகிய அளவில் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழியை யூடியூப் (YouTube) நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் […]