#BREAKING: 3 முறை தோல்வி.., காணொளியில் பேச்சுவார்த்தை தொடங்கியது….!

Published by
murugan

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நடந்து 18 நாட்கள் கடந்துவிட்டன. இருந்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. நேற்று கிவ் அருகே இர்பின் என்ற இடத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்.

உக்ரைனின் மரியுபோல் நகரில் நிலைமை மோசமாகிவிட்டது. அங்கு உணவு மற்றும் தண்ணீரும் தீர்ந்துவிடும் விளிம்பில் உள்ளது. ரஷ்யாவில் மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் செயல்பாடுகளை நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.  இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நடத்தி வரும் நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையே நான்காவது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது.

போர் நிறுத்தம் தொடர்பாக  ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 4-வது சுற்று பேச்சுவார்த்தை காணொளி மூலம் நடந்து வருகிறது. நேரடியாக நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நான்காம் கட்ட பேச்சுவார்த்தை காணொளியில் நடைபெறுகிறது.

Published by
murugan

Recent Posts

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…

20 minutes ago

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

1 hour ago

INDvsENG : இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி : காயம் காரணமாக விலகும் அர்ஷ்தீப் சிங்?

மான்செஸ்டர் : 2025 ஜூலை 20 அன்று, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்துக்கு…

2 hours ago

கள்ளக்குறிச்சி விபத்து : டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார்..4 பேர் பலி!

கள்ளக்குறிச்சி : மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அன்று நடந்த பயங்கர கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்…

2 hours ago

இன்று நடைபெறவிருந்த த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 20, 2025) நடைபெறவிருந்த மாவட்ட செயலாளர்கள்…

3 hours ago

நீலகிரி , கோவையில் கனமழை இருக்கு… அலர்ட் விட்ட வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல. மேற்கு திசை காற்றின் வேக…

3 hours ago