துனிசியாவில் ஆட்சிக்கலைப்பு – நிர்வாகத்தை தானே கையில் எடுத்துக்கொள்வதாக அதிபர் அறிவிப்பு!!

Published by
பாலா கலியமூர்த்தி

துனிசியாவில் அரசை கலைத்து, நிர்வாகத்தை தானே கையில் எடுப்பதாக அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் அறிவித்துள்ளார்.

ஆப்ரிக்கா நாடான துனிசியாவில் அரசு கலைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றமும் கலைக்கப்படுவதாகவும் அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டுள்ளார்.  இதையடுத்து நாட்டின் நிர்வாகத்தை தானே கையில் எடுத்துக்கொள்வதாகவும், தனக்கு உதவ பிரதமர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் துனிசியா அதிபர் கைஸ் சையத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கலைப்பு முடிவை ஆதரிக்கும் வகையில் துனிசிய நகரங்களில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். அதிபரின் முடிவை சில கட்சிகள் கண்டித்திருந்த போதிலும், ஆட்சிக்கலைப்புக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான துனிசியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதாக அந்நாட்டு மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததன் காரணமாக அந்நாட்டு அரசை கலைத்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, துனிசியா பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டும், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கலைப்பு காரணமாக துனிசியா நாட்டில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இஸ்லாமிய ஈர்க்கப்பட்ட என்னாதா கட்சிக்கு (Islamist-inspired Ennahdha party) எதிராக ஆயிரக்கணக்கான துனிசியர்கள் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

அரசாங்கத்தின் தோல்விகள் மற்றும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு தவறியதாக குற்றசாட்டியுள்ளனர். இதனிடையே, துனிசியா அதிபர் பேஜி சைட் எஸ்ஸெப்ஸி கடந்த வருடம் ஜூலை மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக அக்டோபரில் அங்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.71 சதவீதம் வாக்குகளைப் பெற்ற கைஸ் சையத் அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

13 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

13 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

14 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

14 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

15 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

16 hours ago