ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள்,விவசாய நிலங்கள் போன்ற அனைத்தும் லட்சக்கணக்கான எலிகளின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும்,எலிகளினால் அங்குள்ள மக்களுக்கு பிளேக் நோயும் பரவி வருகிறது.
ஆஸ்திரேலியவில்,மில்லியன் கணக்கான எலிகள்,வீடுகள் மற்றும் விவசாயப் பண்ணைகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால்,அங்குள்ள விவசாயிகளும்,மக்களும் எலிகளின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்கின்றனர்.
மேலும்,கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான எலிகள் பயிர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. அதனால், அறுவடை பயிர்களை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.அது மட்டுமல்லாமல்,சிலர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு கிராமப்புற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து,ஆஸ்திரேலியாவின் மத்திய-மேற்கு முழுவதும் பிளேக் நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் அரசாங்கத்திடம் உதவி கேட்டுள்ளனர்.
இதன்காரணமாக,ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் எலிகள் பிரச்சினையை சமாளிக்க 50 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லூசி தாக்ரே, எலிகளின் படையெடுப்பு குறித்து வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில்,ஒரு இயந்திரத்திற்குள் இருந்து இறந்த மற்றும் உயிருள்ள எலிகள் மழைப் பொழிவை போன்று தரையில் விழுவதைக் காட்டுகிறது.
இதற்கிடையில்,சமூக ஊடகங்களில் இன்னும் பல வீடியோக்கள் வெளிவந்து அதனை பார்க்கும் மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…