இந்தியா உள்ளிட்ட சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்ல மூன்றாண்டுக்கு தடை – சவூதி அரபியா அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்வதை தடுக்க செளதி அரேபியா அந்நாட்டு மக்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படும் வகையிலும் மற்றும் தற்போது புதியவகை வைரஸ் பரப்புவதைத் தடுக்கும் முயற்சிகளின் கீழ் ‘சிவப்பு பட்டியலில்’ உள்ள நாடுகளுக்குச் செல்ல அந்நாட்டு மக்களுக்கு, சவுதி அரேபியா மூன்று ஆண்டு பயணத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள சிலர், கடந்த 2020 மே மாதம் முதல் முறையான முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தற்போது தடை விதித்துள்ளது. விதிகளை மீறி செல்பவர்கள் சட்டப்பூர்வமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோபியா, இந்தியா, இந்தோனேஷியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணம் அல்லது போக்குவரத்துக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், பயண விதிமுறைகளை மீறி தடை விதிக்கப்பட்ட சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சென்றுவிட்டு செளதி அரேபியா திரும்பும்போது, அவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் பயணத்திற்கு தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய வளைகுடா நாடான சவூதி அரபியாவில் நேற்று 1,379 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 520,774 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8,189 பேர் உயிரிழந்துள்ளனர்.  2020 ஜூன் மாதத்தில் தினசரி நோய்த்தொற்றுகள் 4,000 க்கு மேல் இருந்து வந்த நிலையில், இந்தாண்டு ஜனவரி தொடக்கத்தில் இருந்து குறைந்து வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

13 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

14 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

15 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

15 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

16 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

17 hours ago