நேற்று வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் இருக்க வேண்டும் என்று தனது நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.
தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டவுடன், அதை உடனடியாக அமெரிக்க மக்களுக்கு வழங்கும். ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான மில்லியன் மருந்துகள் கிடைக்கும், மேலும், அடுத்தாண்டு ஏப்ரல்-க்குள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் போதுமான தடுப்பூசிகள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறினார்.
கொரோனா தடுப்பூசியை தயாரிப்பதற்காக அமெரிக்காவின் “புத்திசாலித்தனமான” மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கடிகாரத்தைச் சுற்றி பணியாற்றி வருவதாகவும், மூன்று தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
“தடுப்பூசிகளைப் பொறுத்தவரை ஏராளமான பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா நோயை முடிவுக்குக் கொண்டு வந்து வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தடுப்பூசி விரைவில் உருவாக்கப்பட வேண்டும்.
ஒரு வெற்றிகரமான தடுப்பூசி மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், இது கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், என்று ஜனாதிபதி கூறினார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…