தினமும் தேனுடன் மிளகு கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Published by
Sharmi

தினமும் தேனுடன் மிளகு கலந்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குளிர் காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய மிக பெரிய பாதிப்பு சளி, இருமல், தொண்டை வலி போன்றவை. இதிலிருந்து விடுபட எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்க கூடிய மிளகும், தேனும் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. மிளகுத்தூளையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். உங்களுக்கு அடிக்கடி சளித்தொல்லை பிரச்சனை இருந்தால் இரவில் தூங்குவதற்கு முன் 1 ஸ்பூன் தேனில் அரை ஸ்பூன் மிளகு தூள் கலந்து உண்ணலாம். இதன் மூலம் சளித்தொல்லை விரைவில் குணமாகும். அடிக்கடி சிலருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவால் நோய் ஏற்படும்.

இப்படி இருக்குமேயானால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கடாயில் சிறிது நெய்யுடன் மிளகு சேர்த்து வறுத்து, நீர் விட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை தேவைப்படும் பொழுது குடிக்கலாம். இது உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். மேலும், இது வயிற்றில் ஏற்படும் சில பாதிப்புகளுக்கும் தீர்வு கொடுக்கும். மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும். அதிக நன்மைகள் இருக்கும் மிளகு மற்றும் தேனை சாப்பிட்டு வரக்கூடிய சளித்தொல்லையிலிருந்து விடுபடுங்கள்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

16 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

17 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago