முடி உதிர்வு -நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு, முடி பாதியிலே உடைந்து போதல்.
இந்த முடி உதிர்வை தடுக்கும் ஒரு பானம் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
வெள்ளரிக்காய் ஒன்று, கருவேப்பிலை ஒரு கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் விதை நீக்கியது ஒன்று, 200 எம்எல் தண்ணீர் ஊற்றி இவற்றை அரைத்து எடுத்து கொள்ளவும்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 250 எம் எல் எடுத்துக் கொள்ளவும்.
வயிற்றில் புண் அல்சர் தொந்தரவு இருப்பவர்கள் உணவு இடைவேளைகளில் எடுத்துக் கொள்ளலாம்.
இவற்றை எடுத்துக் கொண்டால் முடி உதிர்வு படிப்படியாக குறைந்த விடும் அது மட்டுமல்லாமல் நல் உடலுக்கு நல்ல புத்துணர்வையும் தரும்.
எனவே நமக்கு முடி உதிர்வு இருந்தால் அதை உடனடியாக நாம் கருத்தில் கொண்டு முடி உதிர்வை தடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும் இல்லை என்றால் இருக்கும் முடிகளும் உதிர்ந்து விடும்.
உங்கள் கடினமான கைகளை மிருதுவான கைகளாக மாற்ற சூப்பரான டிப்ஸ் இதோ..!