வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்!இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்த மனைவி!

- கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் தனது இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி.
- உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
தேனி மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டியில் காளியம்மன் கோவில் பின்புறம் வசித்து வந்தவர் ஈஸ்வரன் ஆவார்.இவருக்கு மாலதி என்ற மனைவியும் ஹரிணி ஹரிகரன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஈஸ்வரன் சில ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.மேலும் அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து உடலுறவு கொண்டு வந்துள்ளார்.ஒருகட்டத்தில் இந்த சம்பவம் மனைவி மாலதிக்கு தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக மாலதி கணவர் ஈஸ்வரனை கண்டித்துள்ளார்.ஆனால் கணவனோ தொடர்ந்து உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் மனமுடைந்த மாலதி வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் ஈஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025