தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை… ஆட்சியர் உத்தரவு.!

Thoothukudi 144

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 14 ஆம் தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வ திருவிழாவை நடைபெற உள்ளதை அடுத்து, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார் ஆட்சியர் செந்தில்ராஜ். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுதும் இன்று மாலை 6 மணி முதல் வரும் மே 14 ஆம் தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் கூடுவதற்கும்(5 அல்லது மேற்பட்ட நபர்கள்), ஆபத்தான ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருவதற்கும் தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்