Chandrayaan3: ஜூலை 14 பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்..! பிரதமர் மோடி ட்வீட்.!

PMModiTweet

ஜூலை 14ம் தேதி பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திராயன்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தை நோக்கி இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திராயன்-3 செலுத்தப்பட உள்ளது.

இதற்கான 25 மணிநேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இதற்கிடையில், இன்று விண்ணில் செலுத்தப்படும் சந்திராயன்-3 விண்கலத்தை சுமந்துசெல்லும் LVM-3 ராக்கெட்டிற்கான திரவ எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட சோதனையும் நிறைவுற்றதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில் 14 ஜூலை 2023 எப்பொழுதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான்-3 நமது மூன்றாவது சந்திரப் பயணத்தைத் தொடங்கும். இந்த குறிப்பிடத்தக்க பணி நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்