#BREAKING : மக்களவையில் மணிப்பூர் குறித்து தீர்மானம் நிறைவேற்றம்..! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு..!

AmitShah

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் , நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.

மேற்கண்ட கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல்காந்தி பாஜக அரசை விமர்சித்து காட்டமாக பேசியிருந்தார். அதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி அவர்கள் உரையாற்றினார்.

இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பதில் அளித்து உரையாற்றி இருந்தார். அதனை தொடர்ந்து, மணிப்பூரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க கோரி மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அனைத்து பிரிவினரும் இணைந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனை அடுத்து இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்