சினிமா

அவரை பார்க்கும் போது ரொம்ப….கவின் வாழ்கை குறித்து பேசிய நடிகை லாஸ்லியா!

Published by
பால முருகன்

டாடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவினுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இவர் இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதும் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது என்றே கூறலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.

பிறகு தனிப்பட்ட சில கரணங்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதனை தொடர்ந்து நடிகர் கவின் வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய நடிகை லாஸ்லியா கவின் திருமணம் பற்றியும் அவருடைய வளர்ச்சியை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” கவினுக்கு திருமணம் முடிந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதைப்போல அவர் தொடர்ச்சியாக நல்ல படங்களில் நடித்து வருவதை பார்க்கும்போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து அவர் முன்னணி நடிகராக வளர்ந்து வருவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சிலர் முன்பு நடந்த விஷயங்களை வைத்து சேர்த்து வைத்து பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.

அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும் என்கிற அவசியமும் இல்லை.  கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் பழசை போட்டு இப்போது இருக்கும் வாழ்க்கையுடன் சேர்த்து பேசுவது என்னை இதுவரை பாதிக்கவில்லை அவரையும் அது பாதித்திருக்காது என்று நான் நம்புகிறேன்.

எனக்கு இதை பற்றி எந்த கவலையும் இல்லை அவர் சந்தோசமாக இருக்கிறார் நானும் சந்தோசமாக இருக்கிறேன்” எனவும் நடிகை லாஸ்லியா தெரிவித்துள்ளார்.  மேலும், நடிகர் கவின் மோனிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் கொண்டார். இவர் கவினுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவராம். இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

27 minutes ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

2 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

2 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

3 hours ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

3 hours ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

4 hours ago