AK63 [file image]
இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, அஜித்தை வைத்து அவருடைய 63-வது படத்தையும் இயக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த வாய்ப்பு தற்போது கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆம், ‘ஏகே 63’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் இயக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, அஜித்தின் அடுத்த படமான 63 ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும், எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாகவும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பதிலாக தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இதில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் இணைந்துள்ளார்களாம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்போம்.
‘ஏகே 63’ திரைப்படத்தை தயாரிக்க களமிறங்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்.!
ஏகே 63 படத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கம் கை மாறியதற்கான காரணம் என்னெவென்றால், எல்ரெட் குமார் தயாரித்து வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முடிந்துவிடும் என்றும், மார்ச் மாதம் ஏகே படத்தை தொடங்கி விடலாம் என எதிர்பார்த்தனர். அந்த திட்டம் தள்ளிப்போனதால், ஏகே 63 கைவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், ஏகே 63 படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்நிறுவனம், தற்போது பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’, தேஜா நடித்த ‘RT4GM’ மற்றும் ‘புஷ்பா 2’ ஆகியவற்றை தயாரித்து வெளியிட தயராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…