சினிமா

ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்புறம் இது தான்…தங்கலான் குறித்து மனம் திறந்த ஜிவி!

Published by
பால முருகன்

தங்கலான் படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இன்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தங்கலான் படம் மிகவும் அருமையாக வந்துகொண்டு இருக்கிறது. படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. படத்திற்கு என்னால் முடிந்த அளவிற்கு உழைப்பை கொடுத்துள்ளேன்,

இந்த படத்தில் அந்த காலத்தில் என்ன இசை பயன்படுத்தி இருக்கிறார்களோ அதே கருவிகளை பயன்படுத்தி இருக்கிறேன். இதற்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு எந்த அளவிற்கு இசையமைக்க சேலஞ்ஜா இருந்ததோ அதே அளவிற்கு இந்த தங்கலான் படத்திற்கு இருந்தது. இந்த திரைப்படத்தில் புதிதாக இசையில் முயற்சி செய்து இருக்கிறேன்.

வழக்கமாக ஒரு படத்திற்கு இசைமைக்கிறோம் என்றால் குரல் மற்றும் சில கருவிகளை பயன்படுத்தவேண்டி இருக்கும். ஆனால், இந்த டீசரை பார்த்தவுடனே எனக்கு வித்தியாசமாக ஒரே கருவியை வைத்து இசையமைக்கலாம் என்று தோனியது. அதுவும் பலருக்கும் பிடித்தது. எனவே, பலரும் அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறி வருகிறார்கள். அதனை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் மட்டும் என்னுடைய முழு உழைப்பை இந்த படத்திற்காக கொடுக்கவில்லை படத்தில் பணியாற்றிய எல்லா பிரபலங்களும் தங்களுடைய முழு உழைப்புகளை கொடுத்து இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்புறம்  தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்தது தான் மிகவும் சேலஞ்ஜா இருந்துச்சு” என தெரிவித்துள்ளார். மேலும் தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…

4 minutes ago

போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை.!

சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…

23 minutes ago

”அண்ணா குறித்து விமர்சனம்.. பாஜகவிடம் அடகுவைக்கப்பட்ட அதிமுக” – சேகர்பாபு கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…

26 minutes ago

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

1 hour ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

3 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

3 hours ago