சினிமா

மேடையில் நின்று 13 மணிநேரம் பரிசு கொடுத்துவிட்டு மறுநாள் 7 மணிக்கே படப்பிடிப்புக்கு சென்ற விஜய்.!

Published by
பால முருகன்

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பாக விழா ஒன்று ஏற்பாடு செய்து அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி நீண்ட நேரம் நடந்த நிலையில் ஒரு முறை கூட கீழே அமராமல் அங்கு வந்த அணைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை விஜய் வழங்கினார். ஒரு கட்டத்தில் கால் வலி தாங்க முடியாமல் பெஞ்சை பிடித்துக்கொண்டு விஜய் நின்று கொண்டிருந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விஜய் ரசிகர்களை கண்கலங்க வைத்தது என்றே கூறலாம்.

600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லஸ் பரிசளித்த நடிகர் விஜய்!

இந்த நிலையில், 13 மணி நேரங்களுக்கு மேலாக மேடையில் நின்றுகொண்டே பரிசுகளை கொடுத்து வந்த விஜய் அடுத்த நாள் லியோ படத்தின் படப்பிடிப்பிற்கு காலை 7 மணிக்கு சென்றுவிட்டாராம். இந்த நிகழ்ச்சி நடைபெறும் முன்தினம் லியோ படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்தாராம். அப்போது நிகழ்ச்சிக்கு செல்வதை பற்றி விஜய் படக்குழுவிடம் பேசிக்கொண்டு இருந்தாராம்.

நான் மதியத்திற்குள் விழாவை முடித்துவிட்டு, மதியம் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்.. தாமதமானால் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன் என்று கூறினாராம்.  அதற்கு அடுத்த நாள் விழாவிற்கு வந்த விஜய் அடுத்த நாள் 13 மணிநேரம் மேடையில் இருந்த அவர் சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்றார்.

எனவே, இவ்வளவு மணி நேரம் நின்ற அவர் அடுத்த நாள் ஓய்வு கேட்பார் என லியோ படக்குழு எதிர்பார்த்தார்களாம். ஆனால், அனைவர்க்கும் வியப்பூட்டும் விதமாக காலை 7 மணிக்கு சரியாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டாராம். இந்த தகவலை லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

14 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

44 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago