Categories: சினிமா

என்னது எனக்கு திருமணமா? அஞ்சலி சொன்ன பதில்!

Published by
பால முருகன்

நடிகை அஞ்சலி தற்போது ஆரம்ப காலத்தை போல பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சில முக்கியமான படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில், இவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த தகவல் உண்மையா என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது இதற்கு நடிகை அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் சமீபத்தில் ஒரு செய்தியை பார்த்தேன். அதில் நான் ஒரு தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருகிறேன் என்று கூறியிருந்தார்கள்.

பாலிவுட் வாய்ப்பை மிஸ் செய்த த்ரிஷா! அலேக்காக தூக்கிய சமந்தா!

அது மட்டுமின்றி அவரை நான் விரைவில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விடுவேன் என்றும் கூறியிருந்தார்கள். இதனை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தாங்கவே முடியவில்லை. அவ்வளவு சிரிப்பாக இருந்தது. ஏனென்றால், எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.

இருந்தாலும் என்னுடைய திருமணம் பற்றி இப்படி வதந்திகள் பரவுவது எனக்கு வேதனை கொடுக்கிறது. சில நேரங்களில் இதனை பற்றி விளக்கம் அளிக்காமல் இருக்கலாம் என்று நினைப்பேன் ஆனால், என்னால் இருக்க முடியாது அதனால் விளக்கம் அளித்து விடுகிறேன்” எனவும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

13 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

14 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

16 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago