anjali [file image]
நடிகை அஞ்சலி தற்போது ஆரம்ப காலத்தை போல பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சில முக்கியமான படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில், இவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த தகவல் உண்மையா என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது இதற்கு நடிகை அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் சமீபத்தில் ஒரு செய்தியை பார்த்தேன். அதில் நான் ஒரு தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருகிறேன் என்று கூறியிருந்தார்கள்.
பாலிவுட் வாய்ப்பை மிஸ் செய்த த்ரிஷா! அலேக்காக தூக்கிய சமந்தா!
அது மட்டுமின்றி அவரை நான் விரைவில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விடுவேன் என்றும் கூறியிருந்தார்கள். இதனை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தாங்கவே முடியவில்லை. அவ்வளவு சிரிப்பாக இருந்தது. ஏனென்றால், எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.
இருந்தாலும் என்னுடைய திருமணம் பற்றி இப்படி வதந்திகள் பரவுவது எனக்கு வேதனை கொடுக்கிறது. சில நேரங்களில் இதனை பற்றி விளக்கம் அளிக்காமல் இருக்கலாம் என்று நினைப்பேன் ஆனால், என்னால் இருக்க முடியாது அதனால் விளக்கம் அளித்து விடுகிறேன்” எனவும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…