Categories: சினிமா

சலார் திரைப்பட நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Published by
கெளதம்

கேஜிஎப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (டிசம்பர் 22-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜெகபதி பாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வசூலில் வேட்டை நடத்தும் சலார்! முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகளா?

இந்நிலையில், இந்த படத்தின் நடிகர்களின் சம்பளம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் நடிகர் பிரபாஸுக்கு மட்டும் சம்பளமாக ரூ.100 கோடி மற்றும் லாபத்தில் 10% பங்கு என கூறப்படுகிறது. மேலும், இயக்குனர் பிரசாந்த் நீல் ரூ.50 கோடியும், ஸ்ருதிஹாசன் ரூ.8 கோடியும், பிருத்விராஜ், ஜெகபதி பாபு ஆகியோருக்கு தலா ரூ.4 கோடியும் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

11 minutes ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

38 minutes ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

40 minutes ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

2 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

2 hours ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

2 hours ago